Wednesday, August 1, 2012

அன்யோன்யம்

தாலி சமூகத்திற்க்கான ஓர் அடையாளம்
என்றும் தொடரும் அன்யோன்யம்
நல்வாழ்விற்கு அடையாளம்
என சொன்னார் ஒரு பெரியவர்.



கேட்டொருவன் வினவினான்
கழுத்தில் தாலியை காணோம்
காலில் மெட்டியை காணோம்
இருந்தும் மாதம் ஆறு.
திருமணம் செய்யாமலே
அன்யோன்யம் மட்டும்
போதுமென நிலை வருதே?

பெரியவர் ஏதோ சொல்ல வாயெடுக்க
தப்புடா அம்பி
எழுதும்போது க் ச்
விட்டா தப்பில்ல
ஒரு பொண்ண
அப்பிடி விட்டுட்டா தப்பு
கல்யாணம் பண்ணலைனா விடு
ரெண்டாயிரம் கொடு
சீமந்தத்தயாவது ஸ்தாத்தோத்தரமா
பண்ணிடறேனென சொன்னார்
ஓர் அந்தணர்.




படிப்போர் கவனத்திற்கு:
வேண்டுமென்றே ஒற்று(ப்)பிழைகள்  விட(ப்)பட்டுள்ளன. 

2 comments:

  1. சொல்லிய வரிகளைவிட சொல்லாமல் சொல்லியது நிறைய இந்தக் கவிதையில். எனக்குப் பிடிச்சிருக்கு

    ReplyDelete