Tuesday, October 30, 2012

நீரின்றி அமைந்த உலகில் இல்லாது இருக்கட்டும்

ஆறுகளில் வெள்ளப்பெருக்கு போய்
மணல் பெருக்காய் லாரிகளில் செல்லக் கண்டேன்
சாலை அகலம் கூடி
சாலையோர மரங்கள் காணாமல் போனதைக் கண்டேன்
உணவு தந்த விளைநிலங்கள்
வீட்டுமனைகளாகக்  கண்டேன்
இயற்கையன்னையின் பிள்ளையாம் தண்ணீரை
லிட்டருக்கு பதினைந்தாகக் கண்டேன்
தண்ணீரை தன் நீரென தர மறுக்கும்
அண்டையனைக் கண்டேன்
பயிர் வாடி தானும் வாடிய
விவசாயியைக் கண்டேன்


என்னை இடுமிடத்தில்
மரம் நட்டு வையுங்கள்
என் சந்ததியினர்
நீரின்றி அமைந்த உலகில்
இல்லாது இருக்கட்டும்
கண்ணீரே குடிநீராய்
ஆகாது இருக்கட்டும் 

2 comments: