Wednesday, July 9, 2014

கேள்வியும் பதிலும்

கேள்வி:

கண்ணிருந்தும் குருடன்
காதிருந்தும்  செவிடு
வாயிருந்தும் ஊமை
இது மூச்சுவிடும் பிணங்களின் பூமி

காவலாளி திருடன்
அரசியல் வியாதி
சாக்கடைலாம் நல்லவன்
காசிருந்தா நீ சாமி
நல்ல மனசெதுக்கு ஆசாமி

சட்டையெல்லாம் கிழிஞ்சி நாயோட சேந்துச்
சோறுத்திம்பான் பிச்சைக்காரன்
ஏசி ரூமில் இருந்து நாலு ஃபுல்லப் போட்டு
ஃபிக்சிங் பண்ணாப் பணக்காரன்

நல்லவழிப்போயிக் கியூவுலத்தான் நின்னு
வேல செஞ்சா அவன் - பொழைக்கத்தெரியாதவன்
அடியில துட்டு கைமேல துட்டு
அப்டி இப்டின்னு செஞ்சா- கெட்டிக்காரன்

நீ வாயத்திறந்து தட்டிக் கேட்டா
நாலு நாளு நியூசு
அஞ்சா நாளு வேற நியூசு
உன் நியூசு ஃபியூசு

எங்கடாப் போகுது உலகம்
எங்கடாப் போகுது உலகம்
எங்கடாப் போகுது உலகம்
எங்கடாப் போகுது உலகம்?

பதில்:

தப்புன்னு நினைச்சாச்
சட்டுன்னுக் கேளு
சரியின்னுப் படும் வர
வாயத்திறந்து கேளு
நியூசு ஃபியூசாப் போனாத்
திருப்பித் திருப்பிக் கேளு



நல்லதப் பாத்தா
வாயத்திறந்துப் புகழு 
நல்லவைகள் எழுது
நல்லவைகள் பேசு
நல்லவைகள் பாடு
நல்லவைகள் எண்ணு
நல்லவனா வாழு

நல்லவர் நிறைய
நல்ல ரத்தம் பாயும்
கெட்ட சுவாசம் போகும்
உலகமே மகிழும்

இங்க நானும் நல்லவன்
அங்க நீயும் நல்லவன்
அவன் நல்லவன் இவன் நல்லவன்
என நல்லவர் உலகம் ஆகும்
மனம் தான் முதலென ஆகும்
பணம் தான் தூசியாப் போகும்
அதனாலத் தப்பே இல்லாமப்  போகும்

வாய்த்திற மனிதா வாய்த்திற மனிதா
வாய்த்திற மனிதா
பூமி ஆகும் சுத்தம் பூமி ஆகும் சுத்தம்
பூமி ஆகும் சுத்தம்

No comments:

Post a Comment