Saturday, March 7, 2015

நேற்று ஒரு கனா!!!

சூழல்:

இரவு கனவில் நாம் காதலர்களாய் இருந்தோம் என்றும் கனவில் நடந்தவற்றையும் பெண்ணிடம் ஆண் பாடலாய் சொல்கிறார்.

பல்லவி:

நேற்று ஒரு கனா
அதில் நீயும் நானும் ஜோடி
நேற்று ஒரு கனா
அதில் நீயும் நானும் ஜோடி
நம்போல் யாருமில்லை
இந்த காதலுலகில்


சரணம்:

உன் கண்களை பார்த்து வந்ததில்லை
உன் வார்த்தையை கேட்டு வந்ததில்லை
உன் புருவம் பார்த்தேன் காதல் அங்கே
சொல்லிவிட்டேன் சொல்லிவிட்டேன் அந்த நொடி காதல்
வாழ்க்கையெல்லாம் வாழ்க்கையெல்லாம் தொடர்ந்தது காதல்

நாம் கைகோர்த்தால் பேரழகு
சேர்ந்து நடந்தால் ஓரழகு
அழகே உருவாய் காதல் அங்கே
அன்புக்கடல் காதற்கடல் நீந்தி சென்றோம்
 இணைராகம் துணைராகம் பாடியே வாழ்ந்தோம்

முடியில் நரைவர எமன் வந்தான்
தோள்கள் சுருங்கிட எமன் வந்தான்
நம் காதல் கண்டான் பூரிப்படைந்தான்
எமராஜன் கண்களிலே காதலைக் கண்டான்
காதலுலகில் மரணம் இல்லை சொல்லிச் சென்றான்

பல்லவி:

நேற்று ஒரு கனா
அதில் நீயும் நானும் ஜோடி
நேற்று ஒரு கனா
அதில் நீயும் நானும் ஜோடி
நம்போல் யாருமில்லை
இந்த காதலுலகில்

பாடலாய் கீழே


No comments:

Post a Comment