Saturday, September 19, 2015

நதிகள் இணைப்பு பாடல்


பாடலாக

பாடல் வரிகள்

பல்லவி:

வளைந்து வளைந்து வரும் காவிரி நதியே
கங்கையோடு இணையாயோ

அனுபல்லவி:

வங்கக் கடல் சேரும் மகாநதியே
நீ அரபிக் கடல் சேராயோ


சரணம் 1:

பாலையாய் போகும் பாலாற்றிலே
பாலாய் ஓடிடு கிருஷ்ணா
அழகர் இறங்கிடும் வைகைதனிலே
சிந்துவும் தபதியும் சேராதோ

சரணம் 2:

சிறுவாணி நீரின் சுவை பூர்ணாவில் சேரும்
காவிரி நீரின் சுவை கூவமும் அடையும்
துங்கையும் இங்கே பொன்னையில் கலந்திட
பயிர்களும் செழிக்கும் வயிர்களும் நிறையும்

No comments:

Post a Comment