Saturday, March 11, 2017

கண்ணே என் கண்மணியே - தாலேலோ

பல்லவி:
கண்ணே என் கண்மணியே
அழகே என் செல்வமே
தளிரே என் தங்கமே
தூங்கு என் செல்லமே

சரணம் 1:
நிலவும் நட்சத்திரங்களும் நீ தூங்காமல் வாராதாம்
மின்மினிப்பூச்சிக்கூட ஆசையாய் மின்னாதாம்
ஆந்தைகள் கூட்டம் வந்து திட்டுதென்னை கண்மணியே
நீயும் கொஞ்சம் தூங்கு கண்ணே
தாலேலோ தாலேலோ

                              



சரணம் 2:
மயிலைத் தன் தோகை கொண்டு விசிறிவிட சொல்கிறேன்
குயிலையும் கொண்டு வந்து பாடிடச் செய்கிறேன்
சரஸ்வதி அவளும் வந்து வீணையிங்கு மீட்டணுமோ
நீயும் கொஞ்சம் தூங்கு கண்ணே
தாலேலோ தாலேலோ



No comments:

Post a Comment