Saturday, December 9, 2017

கண்ணம்மா - அவள் பார்ப்பதை நிறுத்தவில்லை

1960, மதராஸ்

கச்சேரி தெரு எல்லாம் விழாக்கோலமாய் இருந்தது. கபாலீஸ்வரர் பங்குனி பெருவிழா. ஒளியில் மின்னியது தெரு. ரிக்சாக்கள், கார்கள் என தெரு எங்கும் வண்டிகள். அன்று சுப்புலட்சுமி கச்சேரி வேறு.

கச்சேரி தெரு வாசி - கணபதி சுப்பிரமணியம். டெலிபோன்சில் வேலை. சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு கிராமம். வேலை நிமித்தமாய் வெளியூர் வாசியானதில் முதலாமவர். மனைவி கண்ணம்மா, மகன் கணேசன் என தனிக் குடித்தனம்.

"கண்ணம்மா! இன்னிக்கி சுப்புலட்சுமி கச்சேரி", ஆரம்பித்தார் சுப்பிரமணியம் .

காபியை ஆற்றிக் கொண்டிருந்தவாறே கண்ணம்மா, "நேத்தே கோவில் வாசல்ல அட்டைல எழுதி இருந்தது பாத்தேன். கண்டிப்பா போகணும். சுவாமிய பாக்க வராளோ இல்லையோ. அவாப் பாட்டுக்கு கூட்டம் கூடிடும். ஞாயித்துக் கிழமை வேற."

"சரியா சொன்ன. கிராமபோன் எல்லாம் இப்ப எம்.எஸ் பாட்டு தான்."

"நானும் நேர்ல பாக்கணும்னு அவ்வளவு ஆசப் பட்டேன். கோவில்லப் பாக்கற மாதிரி பண்ணிட்டான்."

"அத ஏன் கண்ணம்மா கண்ண கசக்கிண்டே சொல்ற?"

"ரெண்டு நாளா ஒரே எரிச்சல். கண் ஆஸ்பத்திரிக்குப் போனா சுலைமான் டாக்டர் டிராப்ஸ் தருவர். சரி ஆயிடும்."

"இப்படி எதையும் என் கிட்ட சொல்லாம  இரு. நாளைக்கு சாயங்காலம் சீக்கரம் வரேன், டாக்டர் கிட்ட அழைச்சுண்டு போறேன்."

காபியை அருந்தி விட்டு கோவிலுக்கு கிளம்பினர். சுப்புலெட்சுமியை நேரில் பார்த்தது அவ்வளவு மகிழ்ச்சி. வீடு திரும்புகையில் கண்ணம்மாவிற்கு இமைகள் வெடித்தாற்போல் ஓர் உணர்வு. வலியால் துடித்தாள்.

"அண்ணா! கண்ணெல்லாம் கட்ட எறும்பு கடிக்கற மாதிரி இருக்கு."

"என்ன கண்ணம்மா இப்படி சிவந்துருக்கு. தூசி ஏதாவது விழுந்துருக்கும்.", என்று சொல்லி விட்டு தன அங்கவஸ்திரத்தை அவிழ்த்து வாயினில் ஊதி அவள் கண்களில் வைத்தார்.

"எல்லாரும் பாக்குறா."

"பாக்கட்டும். ரெண்டு நாளா கண் வலின்னு சொல்ற. இப்ப வேற இப்படி செக்கச்செவேல்னு எம்.எஸ். உடுத்திண்டு வந்த புடவை கலர் மாதிரி ஆயிடுத்து உன் கண்ணு. நாளைக்கு நான் ஆபிஸ் லேட்டா போயிக்கிறேன். ஒன்பது மணிக்கெல்லாம் சுலைமான் டாக்டர் கிட்டப் போயிடலாம்."

"எம்.எஸ். புடவையத்தான் பாத்துண்டு இருந்தேளா?"

"பாத்தேன். அவளோ செவப்பா பளிச்சுனு இருந்ததே. உனக்கு வாங்கினா நல்லா இருக்குமேன்னுப் பாத்தேன். சந்தேகத்தப் பாத்தியா உனக்கு? ராமனே தோத்துடுவான் உன் ஆத்துக்காரன் கிட்ட."

"அதையும் பாக்குறேன்."

அடுத்த நாள் காலை. சுலைமான் டாக்டரிடம் கிளம்பினர். ஆய்வுகள் எல்லாம் செய்தார் சுலைமான் டாக்டர்.

"கணபதி சார்! உங்க மனைவிக்கு கண்ணுல இருக்கற நரம்புல பிரச்சனை. வலி இன்னும் அதிகம் ஆகும். கார்னியால இருந்து மூளைக்கு போற நரம்பு. நீங்கப் படிச்சவங்க சொல்றத  புரிஞ்சிப்பீங்க. உங்க கிட்ட சொல்றேன் அவங்க கிட்ட சொன்னா எப்படி எடுத்துப்பாங்கன்னு தெரியல. அவங்க பார்வை கொறஞ்சிக்கிட்டு இருக்கு. கார்னியா ரெண்டு கண்ணுலையும் இனபெக்ஷன்ல அஃபக்ட் ஆயிருக்கு, ஆபரேஷன் பண்ணாலும் பிரயோஜனம் இல்ல. இன்னும் சில நாட்கள் தான் அவங்களுக்கு பார்வை."

கணபதி எதுவும் பேச முடியாது அமைதி ஆனான்.

"சாரி கணபதி."

"டாக்டர் இப்போ கண்ணம்மா கிட்ட சொல்ல வேண்டாம். நீங்க வைட்டமின் மாத்திரை எழுதித் தாங்க. அவக்கிட்ட தூசி, அடுப்புக் கரி கண்ணுல பட்டதுனால எரிச்சல்னு சொல்லி குடுங்க. நான் சமயம் பாத்து சொல்லிக்கறேன்."

கணபதி சொன்னவாறே செய்தார் டாக்டர். வலி மிகாமல் இருக்க மாத்திரைகள் வழங்கினார்.

நாட்கள் செல்ல பார்வை மங்குவதாய் உணர்ந்தாள் கண்ணம்மா. டாக்டர் சுலைமான் கருணையில் ஒரு கண்ணாடிப் பொருத்தப்பட்டது.

"கணபதி சார்! கண்ணம்மா கிட்ட இன்னும் சொல்லலையா நீங்க?"

"தைரியம் வர வெச்சிட்டு இருக்கேன் சார்.  டிரான்ஸப்ர் கிடைச்சிருக்கு. நாகர்கோவிலுக்கே. மே மாசம் அங்க மாறனும். இங்க இருந்தா அவளுக்கு கஷ்டம். அங்க பாத்துக்க நிறைய பேர் இருகாங்க."

"கடவுள் காப்பாத்துவான் கணபதி சார். நான் உங்களுக்காக துஆ பண்றேன்."

"நன்றி சார்."

பங்குனி முடிந்து சித்திரை பிறந்தது. வாசலில் கோலமிட்டுவிட்டு வந்தாள் கண்ணம்மா.

"கோலம் போட்டாச்சா?"

"போட்டாச்சுண்ணா."

சற்று முன்னே சென்றவள் பின்னே வந்து
"இந்த சுலைமான் டாக்டர் வைத்தியம் படிச்சிட்டு வந்தாரா என்னன்னே தெரியலை. புள்ளிய வெச்சிட்டு பாத்தா ஒன்னும் தெரியலையேன்னு தெரியறவரைக்கும் போட்டேன். பக்காத்தாத்து கிரிஜா வந்துட்டு புள்ளியையே கோலம் அளவுக்கு போடுறையேன்னு கேலி பண்றா. கண்ணாடிப் போட்டும் நல்லா தெரிஞ்ச பாடு இல்ல. இன்னும் மோசமாயிண்டு இருக்கு."


"என்ன சொல்ற நீ? நல்லாத் தெரியும்போதே சிவாஜி படம் வந்துருக்கு. தெய்வப்பிறவி. பாத்துடலாம். பிளாசா தியேட்டர்ல போட்டுருக்கானாம்."

"நான் வரல."

"கணேசன் படம் கண்ணம்மா. சிவாஜி கணேசன் படம். உன் பையனுக்கு கணேசன் பெயர் வைக்க ஒத்த கால்ல நின்ன."

"போகலாம்."

மாலை படம் முடிந்து வீடு திரும்பினர்.

"அன்பாலே தேடிய என் அறிவு செல்வம் தங்கம். அன்பாலே தே...டிய என் அறிவு செல்வம் தங்கம்.", சுருதி கட்டிப் பாடினார் கணபதி.

"படுக்கைல என்ன முதலிரவுப் பாட்டு.?"

"எவ்வளவு நல்லா இருந்தது அந்தப் பாட்டு. படம் பிடிச்சதா?"

"பிடிச்சது. கண்ணுதான் சரி இல்ல. சிவாஜி யாரு, எஸ்.எஸ்.ஆர் யாருன்னுத் தெரியல. குரல் வெச்சுக் கண்டுபிடிக்க வேண்டி இருக்கு. பாடும் போது மட்டும் அவருக்கு ரெண்டு குரல் பாத்தேளா?"

"மக்கு. சிவாஜி பாட மாட்டார். அவர் வாயசைப்பார். பாட தனியா ஆள் இருக்கா. அவா பாடினதையும் இவா வாயசைக்கரதையும் சேர்த்துடுவா. இன்னும் பாகவதர் காலத்துலயே இருக்க."

"அது சரி. வயசானவர் பாடுற மாதிரி இருந்தது அந்தப் பாட்டு."

படுக்கையில் படுத்துக் கொண்டே பேச்சு தொடர்ந்தது.

"நாகர்கோயில் மாற்றம் கேட்டிருக்கேன் கண்ணம்மா. மே மாசம் அங்க போக சொல்லுவா போல இருக்கு ஆபீஸுல. இதே உத்தியோகம் தான். இறச்சகுளத்துல இருந்தே சைக்கிள்ல போயிட்டு வந்துடலாம்."

"நீங்களே மாற்றம் கேட்டேளா?"

"ஆமாம் கண்ணம்மா."

"மெட்ராஸ்ல தான் நல்ல முன்னேற முடியும். அது இதுன்னு சொல்லி கூட்டிண்டு வந்தேள்."

"நம்ம கோவில் தாணு ஐயரோட சக்கர பொங்கல், பாயாசம், கொழுக்கட்டை மாதிரி இங்க எவனும் பண்ணலையே."

"இது ஒரு காரணமா?"

"உன் கண் வேற சரி இல்லைன்னு சொல்றியே கண்ணம்மா."

"அதான் சுலைமான் டாக்டர் மருந்து குடுத்துருக்காரே."

"கண்ணம்மா! நான் உன்கிட்ட மறைச்சிட்டேன். உனக்கு கண்ணுல பார்வை கொறஞ்சிண்டு வருது. இன்னும் கொஞ்சம் நாள்ல உன் பார்வை முழுசா போயிடும்னு டாக்டர் சொன்னார். நீ எப்படி கண்ணம்மா இங்க தனியா கஷ்டப்படுவ? அங்க என் அம்மா, உங்க அம்மா எல்லாரும் இருக்கா?"

அழுது தீர்த்தாள் கண்ணம்மா. தூங்கிக் கொண்டிருந்த கணேசன் சிலுசிலுத்தான். ஏதேதோ புலம்பி தீர்த்தாள் கண்ணம்மா.

"கண்ணம்மா! அழாதே. வெப்ராளப் படாதே.  இனி உனக்கும் சேர்த்து நான் பார்ப்பேன். அழாதே.", உருகினார் கணபதி.

மே 1961, இறச்சகுளம்

ஊர் உள்ளே வரும் பொழுது நாவல் மரங்களும், தென்னை மரங்களும் சுகமாய் காற்றைத் தந்தன. சுற்றியிருக்கும் மலைகளில் மேகம் கால் போட்டு படுத்துக் கொண்டிருந்தது

"சாமி, விடுமுறையா? பங்குனி உத்திரத்துக்கு வரலையே. இந்த முற சரியான சாமியாட்டம். பூதத்தானும் வந்து போனபாடு இல்லையே."

"அப்படியா? செல்லையா நான் லீவுல வரல. இங்கையே மாத்தி வந்துட்டேன். நாகர்கோவில்ல தான் ஜோலி."

"நல்லதா போச்சு சாமி."

"எத்தனை தடவ சொல்லிருக்கேன் சாமின்னு கூப்பிடாதான்னு."

இந்த சம்பாஷனை தொடர, கண்ணம்மா சுற்றியும் பார்த்துக் கொண்டு வந்தாள். மரங்களின் பச்சையும், சாலையின் மண் நிறமும், குளங்களின் நீர் நிறமுமே அவள் கண்களுக்குத் தெரிந்தன. நிறம் மட்டும் தான் தெரிந்தது அவளுக்கு. மரங்களின் உயரத்தை வைத்து நாவல், தென்னை, வாழை என வகைப்படுத்திக் கொண்டாள்.

கண்ணம்மாவிற்கு தனக்கு திருமணம் ஆன பதினாறு வயது வரை இறச்சகுளம் தான் உலகம். ஒவ்வொரு அடியும் அத்துப்படி. படிகளில் ஏறுவது, வீட்டின் முகப்பில் ஓட்டில் இடித்துவிடாமல் குனிந்து செல்வது எனப் பார்த்துக்கொண்டாள்.

நாட்கள் செல்ல செல்ல நிறங்களும் தெரியாது இருள் மட்டுமே தெரிந்தது கண்ணம்மாவிற்கு.

"கண்ணம்மா பாசமலர்னு ஒரு படம் சிவாஜி கணேசன் நடிச்சது போலாமா?"

"நான் என்ன அண்ணா பாக்கறது? இருட்டுத் தவிர ஒன்னும் தெரியல இப்ப எல்லாம். கணேசன் சமத்து தொந்தரவு பண்ணாம புரிஞ்சிண்டு இருக்கான்."

"அவன் நம்ம பையன். சமத்தா தான் இருப்பான். நாளைக்கு சாயிங்காலம்  ஆட்டத்துக்கு பாசமலர் போறோம். தயாரா இரு."

படத்துக்கு கிளம்பினர். வசனங்கள் இல்லாது காட்சிகளால் புரியவைக்கும்படி இருக்கும் இடங்களில் கணபதி விளக்கினார், கணபதியின் கண்கள் வழி திரைப்படம் பார்த்தாள்  கண்ணம்மா.

"கண்ணம்மா படம் பிடிச்சதா?"

"எனக்கு அழுகையே வந்துடுத்து."

"பார்த்தேனே. அந்த மலர்ந்தும் மலராத பாட்டுல என்னமா அழுத? முன்னாடி உட்கார்ந்தவன் வெள்ளம்னு நெனைச்சிட்டான்."

"சிவாஜிக்கு இந்த குரல் பொருத்தமா இருக்கு. அவரே பாடுற மாதிரி.  அந்த தெய்வப்பிறவி பாட்டு கிழவன் பாடின மாதிரி இருந்தது."

ஊரில் திரும்பி வரும்பொழுது கண்ணுத் தெரியாதவளுக்கு பாசமலர் படமாம். எதைக்கண்டானோ இந்த கண்ணம்மா கிட்ட என கிராமம் முழுதும் காதுப்படவே பேச்சுக்கள்.

நாட்கள் சென்றன. நேரில் எல்லோரும் அன்பாய் பேசினாலும், குருடிக்கு வாழ்வைப் பார் எனப் பேச்சுக்களும்.

"போன வாரம் செல்லையன் வயல் பணம் கொடுத்தான். நல்ல விளைச்சல் இந்த வருஷம். அந்தப் பணத்துல உனக்கு ஒரு ஆரமும் வளையலும் வாங்கினேன். போட்டு விடட்டா?"

"எனக்கெதுக்கு அண்ணா நகை. குருடிக்கு"

"அப்படிச் சொல்லாத கண்ணம்மா."

"எனக்குன்னு ஏன் இப்படி செலவு? பார்க்கவும் முடியாது, நான் ஊர் முன்னாடி தங்கத்துல மின்னிண்டு என்ன பிரயோஜனம்."

"கோவில்ல தினமும் தாணு சாமிக்கு எல்லாம் நகைல அலங்காரம் செய்யுறான். சாமிக் கேட்ட மாதிரி நான் பார்க்கலையே. இல்ல சாமி தான் பாத்துக்கறதா தனக்கு இந்த இந்த நகைப் போட்டுருக்கு, இந்த இந்த பூ சாத்திருக்குன்னு."

"உடனே கடவுளப் பழிக்காதேள்."

"நான் மாட்டி விடட்டா?"
மாட்டி விட்டார் கணபதி.

யக்ஞ மாமா வாசலில் இருந்து கணபதியின் பெயரை அழைத்தார்.

"வாங்கோ! யக்ஞ மாமா. ஊருக்கு வந்து ரெண்டு மாசம் ஆச்சு. இப்பதான் கண்ணு தெரிஞ்சதா?"

"எனக்கு நல்லாத் தெரியறது. உனக்கும் தெரியறதான்னு கேட்டுண்டுப் போக வந்தேன்."

"சண்டை போடவந்துருக்கேளா? உக்காருங்கோ."

"கணபதி! உன் ஆத்துக்காரிக்கோ கண்ணு சுத்தமாத் தெரியலை. கணேசனும் சின்ன பையன். நீ நல்லா சம்பாதிக்கற. சர்க்கார் உத்தியோகம், நல்ல வயல் எல்லாம் இருக்கு."

"என்ன சொல்ல வரேள் மாமா?"

காபி எடுத்து வந்தாள் கண்ணம்மா.

"கண்ணம்மா கோவில்ல தாணு பாயாசம் தரேன்னு சொன்னான். அவன் நாகர்கோயில் போகணுமாம். கொஞ்சம் வாங்கிண்டு வாயேன்."

கண்ணம்மாவும் கணேசனும் கோவில் கிளம்பினர். இருவரும் காபி அருந்தினர்.

"கணபதி. திருப்பதிசாரத்துல வெங்கடேசன் வாத்தியார் இருக்கார் இல்லையா. கோமதின்னு அவளுக்கு ஒரு பொண்ணு. திவ்யமா பாடுவா. நல்ல அழகு. சாவித்திரி மாதிரி. நான் சொன்னேன்னா."

"மாமா. நீங்க எதப் பேச வரேள்னு புரியறது."

திரும்பி வந்த கண்ணம்மா வாசல் திண்ணையில் அமர்ந்து கொண்டாள்.

"கணபதி குறையிருக்கு டா  அவளுக்கு, நீ என்னடான்னா சினிமா, நகைன்னு கண்ணுத் தெரியாதவளுக்கு இவ்வளவு செலவு பண்ணுற. இளமைய வீணாக்காதே."

சற்றே கோபம் ஆனார் கணபதி.

"அவளுக்கு என்னைய்யா குறைய கண்டீரு. காபி அவப்போட்டது தான். நல்லா இருந்ததா?"

"காபி போட்டா?"

"நல்லா இருந்ததா? இல்லையா? சொல்லும்."

"நல்லா இருந்தது."

"சக்கரைக்கு பதிலா உப்போ, பாலுக்கு பதிலா மோரோ குடுத்தாளா?"

"இல்லை. காபியும் இதுவும் எப்படி சரியாகும். குறை இருக்கே."

"எனக்குத்தான்  குறை. குன்னத் தொங்கிடுத்து. அவளுக்கும் மாப்பிள்ளை பாரு."

"ஏன் இப்படி எல்லாம் பேசற?"

"மாமா. நான் மரியாதையா சொல்லிக்கறேன். இதப் பத்தி பேச நம்மாத்துக்கு வர வேண்டாம். இங்க தான் நானும் அவளும் இனிமேல் வாழணும். புரிஞ்சிண்டு இருப்பேள் அப்படின்னா சந்தோசம்."

திண்ணையில் அமர்ந்திருந்த கண்ணம்மாவிற்கு கேட்காமலா இருந்திருக்கும்?

அன்று இரவு

"என்ன ஒரே சத்தம் யக்ஞ மாமாவோட."

"புஷ்கலா மாமி படுத்தறாளாம். பாவம் புலம்பித் தள்ளிட்டார்."

"வாசல்ல என் காதுல விழுந்தது."

"இதப் பற்றி பேச வேண்டாம். தூக்கம் வருது. நான் படுத்துக்கறேன்."

கண்ணம்மாவிற்கு நன்றி சொல்ல வேண்டி எண்ணம். வார்த்தையால் சொல்லி என்ன பயன்? நெகிழ்ச்சியில் அவள் வாயடைத்தது. இதுவல்லவோ காதல் என எண்ணிக் கொண்டாள்.

குற்ற உணர்வோ என்னவோ? அடுத்த நாளிலிருந்து யக்ஞ மாமா தினமும் காபி அருந்த ஆஜர் ஆகிவிடுவார்.

தெரு குழந்தைகள் எல்லாம் கண்ணம்மா வீட்டு தோசை என்றால் ஓடி வந்துவிடுவர். குரலை வைத்து யார் என கண்டு கொள்வார் கண்ணம்மா. அன்பாய் முகத்தை வருடியும் பார்ப்பாள்.

இருபது வருடங்கள் கழித்து

"அம்மா! நான் கேட்டாக் கோச்சிக்க மாட்டியே?"

"கணேசா! கிட்ட வா."
முகத்தை வருடிக் கொடுத்தார்.

"என் முகம் உனக்கு ஞாபகம் இருக்கா அம்மா?"

சிரித்துக்கொண்டு,"முகத்துல தாடி எல்லாம் வந்துருக்கு கணேசனுக்கு."

"இருக்கா அம்மா?"

"இருக்குப் பா. மயிலாப்பூர்ல இருந்தோம். மூணு வயசு உனக்கு. அப்பப் பார்த்த முகம். இன்னும் ஞாபகம் இருக்கு."

"இப்போ எப்படி இருக்கும்னு பாக்க ஆசை இல்லையா?"

"முடியாதேப் பா."

"உனக்கு ஏதாவது கற்பனை வருமா? எப்படி இருப்பான்னு தோனுமா?"

"அந்த மூணு வயசு குழந்தைக்கு மீசை மொளச்ச மாதிரி" என்று சிரித்தார்.

கணபதி  உள்ளே நுழைந்தார்.

"கண்ணம்மா! நீ எப்படி இருக்கன்னு தெரிஞ்சிக்கறையா?"

"எனக்கு எதுக்கு?"

"இன்னும் அழகாயிட்ட. தலையில அங்க அங்க வெள்ளி முடி. அவ்வளவு தான். எனக்கு தான் வழுக்கை. யக்ஞ மாமா மாதிரி,"
சிரித்துக் கொண்டாள் கண்ணம்மா.

தனது வழுக்கைத் தலையில் கண்ணம்மாவின் கையை எடுத்து வைத்தார் கணபதி. இருவரும் சிரித்துக் கொண்டனர்.
அன்பும் காதலும் கரைபுரண்டு ஓடின.

1996, இறச்சகுளம்

"பாட்டி, பாட்டி."

"ஆனந்த். பாட்டி தூங்கும்போது தொந்தரவு பண்ணக்கூடாதுன்னு சொல்லிருக்கேனா?"

"பாட்டி, நீ தான் கூப்டா எழுந்துக்கற. தாத்தா எழுந்துக்கல."

"அவரத்  தொந்தரவுப் பண்ணாத."

மாலை நான்கு மணிக்கு காபி போட்டுவிட்டு கணபதியை எழுப்ப சென்றார். அப்பொழுதும் எழவில்லை.

"என்ன தூக்கம். ரிட்டயர்டு ஆனா ராத்திரி பகல் தெரியாம தூங்கறது. காபி ஆறறது. டேய் ஆனந்த். எழுப்பு டா தாத்தாவ. கணேசா! பாரு அப்பா இப்படித் தூங்கறாரு."

கணேசன் வந்து பார்த்துவிட்டு கதறி அழத்தொடங்கினான். புரிந்து கொண்ட கண்ணம்மா புலம்பிக்கொண்டே சமயலறைக்கு சென்றாள்.

"கண்ணுத் தெரியமாட்டேங்கறது கணேசா! இருட்டா இருக்கு கோமதி. ஆனந்த், ராதா பாட்டிக்கு கண்ணுத் தெரியலை."
இருவரின் அன்பை நன்கு அறிந்த கணேசனமும் அவரது மனைவியும் அமைதியாய் இருந்தனர்.

இந்த கதை எழுத காரணியாய் இருந்த உண்மை தம்பதி. புகைப்பத்திற்கு நன்றி திரு, ஆனந்த் 


என்றும் நன்கு அறிந்து காலடி வைக்கும் கண்ணம்மாவின் கால்களுக்கு அப்பொழுது ஒவ்வொரு அடியும் புதிதாய் இருந்தது. அவள் சற்று முன்னர் ஏற்றிய விளக்கு அவள் ஆடையைப் பற்றிக்கொண்டது.

"கண்ணுத் தெரியலையே கணேசா. கண்ணுத் தெரியலையே."
உடல் எரிவதைக் கண்ட ஆனந்த்

"அப்பா! பாட்டி பாட்டி", என அலறினான்.

"அம்மா"

"கணேசா கண்ணுத் தெரியமாட்டேங்கறது டா."

"அம்மா(அழுதவாறு)"

"கணேசா கண்ணுத் தெரியமாட்டேங்கறது டா. அவர் எழுந்துட்டாரா?"

"அம்மா!"

தண்ணீரை எடுத்து அவர் மேல் ஊற்றினான். நெருப்புக்  காயம் உடலெங்கும் இருந்தது.

"கணேசா கண்ணுத் தெரியமாட்டேங்கறது. இருட்டா இருக்கு எனக்கு. அவர் எங்கே இருக்கார். ஆனந்த் தாத்தாவ எழுப்பு."


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆறு நாட்களில் உயிர் இழந்தார் கண்ணம்மா!

_____________________________________________________

உருக்மிணி - கண்களை இழந்த தேவதை. இவர்களை நேரிலும் பார்த்திருக்கிறேன். இவரது மகன் இராம்ஜி மற்றும் பேரன் ஆனந்த் இவர்களைப் பற்றி கூறும்போது நெகிழ்வாய் உணர்ந்திருக்கிறேன். அன்பும் காதலும் கரைபுரண்டு ஓடிய வாழ்க்கை. அவர்களின் உண்மை சம்பவங்களை அடிப்படையாய்க் கொண்டு கற்பனை சிறுகதை. அனுமதி தந்த ஆனந்திற்கு நன்றி. என்னுடைய கதைகளில் எத்தனையோ மரணிக்கும் சம்பவங்கள் எழுதி உள்ளேன். இந்த கதையில் எழுதும்பொழுது அழுதேன். மனநிறைவு தந்த கதை.

Friday, November 10, 2017

அன்பிலும் பொருந்தும் நியூட்டனின் மூன்றாம் விதி

அவன்: சார் காபியா? டீயா?
இவன்: காபியே சொல்லிடுங்க சார்
அவன்: ரெண்டு காபி தம்பி

அவன்: ரொம்ப சங்கடமா இருக்கு சார் சில சமயம்
இவன்: என்ன சார்? என்ன ஆச்சு? நீங்க இந்த மாதிரிலாம் சொன்னா எப்படி?  சந்தோசமா  பாஸிட்டிவா இருந்தா தானே சார் நீங்க.
அவன்: என்ன பண்றது சார். நாம எல்லாருக்கும் அன்பு செஞ்சு நல்லது செஞ்சாலும், எல்லாரும் அப்படி நமக்கு திருப்பி நினைக்கறது இல்லையே. நன்றியும் மன்னிப்பும் சொல்றதுக்கு கூட மனசு இல்ல சார் பலருக்கு.
இவன்: புரியுது சார்
அவன்: நாம எல்லார் மேலயும்  காட்டுற அன்பு நமக்கு திருப்பி கெடைக்கலனா ஒரு சோகம் வருது பாருங்க. மன வேதன சார்.
இவன்: காபி எடுத்துக்குங்க சார்.


அவன்: நான் எதையும் எதிர்பார்த்து செய்யல. ஆனா அப்பப்போ மனசு கேக்குது சார்.
இவன்: ஹ்ம்ம்
அவன்: வெறுப்பு உணர்ச்சி வருது சார்.
இவன்: உங்கள பார்த்து பாசிட்டிவிட்டி தெரிஞ்சிக்கிட்டேன் சார். உங்களுக்கு இந்த மனநிலை இப்படி வந்துருக்க வேண்டாம். நான் ஒன்னு சொல்லட்டா சார்.
அவன்: சொல்லுங்க சார்
இவன்: இந்த அன்புக்கும் நியூட்டன் மூன்றாம் விதி மாதிரி இக்குவல் அண்ட் ஆப்போசிட் ரியாக்சன் கண்டிப்பா இருக்கு சார். கர்மான்னும் சொல்லலாம். தமிழ்லயே அழகா சொல்லிருக்காங்க தினை விதைச்சா தினை தான் சார்.
அவன்: எப்போ பா?
இவன்: கிடைக்கும் சார் நியூட்டன் காலத்த வெச்சி சொல்லலையே. இக்குவல் என்ன சார்? அதுக்கு மேலையே கிடைக்கும் அன்பு, காதல்ல எல்லாம்.
அவன்: பேச்சுக்கு நல்லா இருக்கு சார்.
இவன்: சார் உங்களுக்கு திருப்பி வரணும்னு இல்ல சார். உங்களப் பாத்து  நாலு பேரு ஏதாவது செய்யறான் சார். நான் அத நேர்லப் பாக்குறேன்.  அது கூட ஒரு ரியாக்சன். எங்கயோ படிச்ச ஞாபகம் சார். எதோ ஒரு மரம் வேர் விடறதுக்கே மாசங்கள் ஆகுமாம்.
அவன்: சரி. நீ சொல்றதே சரின்னு வச்சுக்குவோம். வஞ்சம் புடிச்சவன், ஏமாத்தி வாழறவன் எல்லாம் நல்லா வசதியா இருக்கானே.
இவன்: மாறும் சார். இங்கத் தொடங்குற அன்பும் நல்ல எண்ணங்களும்  பரவும் சார். அன்பு நிறைஞ்சிட்டா வஞ்சம் அழிஞ்சிடும். வஞ்சம் இன்னொரு பெரிய வஞ்சத்தால அழியறதோட அன்புனால இல்லாமப் போகட்டும் சார்.
அவன்: இந்த காபி மாதிரி புத்துணர்ச்சியா இருக்குப்பா நீ பேசுறது
இவன்: சார் உங்களுக்குப் போய்
அவன்: இக்குவல் ரியாக்சன் உணர்றேன் உங்க பேச்சுல.
இவன்: சார்!

Thursday, September 7, 2017

மாவீரர் மகாத்மா காந்தி

கத்தியையும் வாளையும் ஏந்தி
எதிரணியை வெட்டி சாய்த்த வீரன்(?)
துப்பாக்கியும் பீரங்கியும் கொண்டு
மனிதர்களை சுட்டு வீழ்த்திய வீரன்(?)
வஞ்சமும் நஞ்சும் கொண்டு
தீபுத்தியினால் பலரை வீழ்த்திய வீரன்(?)
ஹிரோஷிமாவும் நாகசாகியும்
அழிய தன் விமானித்திலிருந்து
அணுகுண்டை செலுத்தினானே அவ்வீரன்(?)
சொன்னதை செய்தனர் இவ்வீரர்கள்(?)
வெற்றி அந்நேர மகிழ்ச்சி!
மாண்டவர் என்ன பாவம் செய்தனர்?
மிருகம் நிறைந்த மனிதத்தில்
பங்காய் இருப்பதை தவிர!
போர் புரிந்த போராளிகளாம் இவர்கள்!!

போராளிகளின் செயல்களே
அவர்கள் மனதை கொன்றிடுமே!
குற்ற உணர்வு வாட்டிடுமே!
தண்ணீரைப் பார்த்தாலும்
செந்நீராய்த் தெரியாதோ?

அன்பு வழி போர் செய்தானே
என் பாட்டன் காந்தி -
நிஜப் போராளி!
எதிரியை தாக்கிய ஆயுதம் அஹிம்சை
பிறரை வருத்தாது
தம்மை வருத்தி!
இந்தியர்கள் பொறுமையின் சிகரங்கள்!!
தாங்கிக் கொள்ளும் பக்குவத்தை
சரியாக பயன்படுத்திய போராளி!!
இக்குணம் மிகவும் பழகிவிட்டது
தற்போதைய இந்தியாவிற்கு!!
காந்தி வழி கிடைத்த சுதந்திரத்தை
சரியாகத் தொடரச் செய்வோம்!!

Friday, August 18, 2017

கடநாட்டு மருதன்

  "எத்தனைப் போர் வீரர்களை இந்த நாட்டைக் கைப்படுத்த இழந்திருப்போம்! கொண்டாடடியே ஆக வேண்டும். அனைத்து செல்வந்தர்களும் தங்கள் செல்வங்களில் பாதியை தர வேண்டும். திருமணம் ஆகாத செல்விகளையும்" நமுட்டுச் சிரிப்புடன் ஆணையிட்டான் மருதன்.

         மருதன் கடநாட்டின் படைத் தளபதி. அசாத்திய வீரன். மிருகம். இவன் வாள் செலுத்தி எதிரியின் ரத்தம் இவன் முகத்தினில் தெளிப்பதையே இவன் மிகவும் விரும்பினான். இவன் வீழ்த்தாத நாடே எங்கென்றுத் தேட வேண்டும். கடநாட்டின் செல்வத்தைப் பெருக்கினான் - மக்களைக் கொன்று, செல்வங்களை கட்டாயப் படுத்தி அகப்பற்றி. மன்னனும் கண்டு கொள்ளவில்லை, தன் நாட்டு மக்கள் நல்வாழ்விற்கு, தன் நாட்டு செல்வத்தேவைக்கு பிற நாடும் நாட்டு மக்களும் எக்கேடு கேட்டால் என்ன என்ற மனநிலை. மற்ற நாடெல்லாம் தனது கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும். இவனேப் பெரியவன் என்ற மனநிலை. மன்னனின் பெயர் திரம்பன்.  

             முன்னர் செண்பக நாட்டில் நடந்த கதை மிகவும் கொடூரமானது.

  செண்பகநாடு - கடநாட்டின் கிழக்கே ஓர் அழகியத் தீவு. செல்வச் செழிப்பான நாடு.  வீரத்திலும் குறைவில்லாத நாடு. கடநாட்டுக்கு இணையான படை பலம். மருதனுக்குத் தான் ரத்த போதை ஆயிற்றே, செண்பக நாட்டின் செந்நீர் வாசனை அறிய எண்ணினான். செண்பகநாட்டு செல்வங்களை எடுத்துக் கொண்டால் கடநாடு செல்வநாடு ஆகிடுமே! திரம்பனிடம் அனுமதி பெற்று செண்பகநாட்டுக்குப் படை எடுத்தான்.  இரு பக்கங்களும் உயிர் இழப்புகள் இருந்தாலும் மருதனின் படையே வென்றது. 
யுத்தத்தில் வென்றால் தர்பாரைக் கூட்டி திரம்பனின் செருப்பை சிம்மாசனத்தில் வைத்து செருப்பை அரசராய் அறிவிப்பான். இது போல ஆயிரத்துக்கும் மேற்பட்ட செருப்புகள் அரியணை ஏறி உள்ளன. பின்னர் செல்வந்தர்களை அழைத்து பாதி செல்வத்தையும், பெண்களையும் சூறையாடி சென்றிடுவான். செண்பகநாட்டிலோ இவன் தர்பாரில் பேசும் பொழுது சில இளைஞர்கள் கல்லை இவன் மேல் எறிந்தனர். "காட்டுமிராண்டியே வெளியே போ", என்று கூச்சல்கள் வேறு. தலை வெடித்தாற்போல் இருந்தது மருதனுக்கு.
             
          "பயமற்று கடநாட்டவரையே எதிர்க்கும் பொதுமக்கள். இந்நாட்டவர் ஒரு ஆண்  கூட உயிரோடு இருத்தல் ஆபத்தாய் முடியலாம். எத்தனை லட்சங்கள் ஆண்கள் இருந்தாலும் அவர்கள் இறக்க வேண்டும் கடநாட்டு  வாளினால்! போர் வீரன் கொள்ளும் ஒவ்வொரு ஆணின் வீடும் அவ்வீட்டின் பெண்டிரும் போர் வீரனுக்கு சொந்தம்.", ஆணையிட்டான் மருதன்  அனைத்து ஆண்களும் மாண்டனர். கர்ப்பிணி பெண்களுக்கும் அன்றே கடைசி நாள். இறை முறையால் செண்பக நாட்டுப் பெண்கள் போர் பயிற்சி இல்லாதவர்கள். முக்காடு அணிந்தே இருப்பர். பல பெண்கள் தங்களை மாய்த்துக் கொண்டனர். ஆணில்லா நாடாக்கி சிதைத்தான் மருதன்.

      ஆதிரநாட்டை வீழ்த்தி செல்வங்களை சூறையாடி நாடு திரும்பினான் மருதன். மருதனுக்கு இருபத்தி ஏழு மனைவிகள். வெறிகொண்ட மிருகத்திற்கு அன்பு ஏது? காதல் ஏது? வெறியினால் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள். இவன் முதல் மகளுக்கு இருபத்தி நான்கு வயது, பதினைந்து வயதில்  கற்பமாய் ஒரு மனைவி வேறு. போர் இல்லாவிடில் இதுவே அவன் வேலை. 
_________________________________________________________________________________
   
   மருதன் வீரனாய் கிடைத்ததற்கு கடநாடு கொடுத்து வைத்திருக்க வேண்டும். எதிரி என்று நாட்டவருக்கு ஒருவர் இல்லை.  போரில் எல்லாம் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்திருக்கிறார். மருதனால் உலகில் எந்த நாடு ஆயினும் கடநாட்டிற்கு அடிமை நாடு தான். மற்ற நாடுகளுக்கு வேலை கடநாட்டின் வேலைகளுக்கு பின்னிருந்து உதவி செய்வதே. கடநாடு தரும் எலும்புக்கு வேலை செய்யும் அடிமைகள் தான். கடநாட்டுமயமாக்கல்!அவரின் கோபமும் வெறியுமே கடநாட்டு மக்களை நிம்மதியாக செல்வத்தில் குறைவில்லாது வாழ வைத்தது. நாட்டு மக்கள் எல்லாம் தாங்கள் பெற்ற குழந்தைகளுக்கு மருதன் என்று பெயர் வைத்தனர். ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒவ்வொரு மாதமும் நாலாயிரம் தங்கங்கள் வழங்கப்பட்டது. பெண்கள் எல்லாம் அவன் வீரத்தில் மயங்கி அவனை மணக்க விரும்பினர். அரசரின் ஒரு பெண்ணும் மருதனின் மனைவிமார்களில் ஒருவர். மருதன் பெண்களை சென்று சூறையாடவில்லையே. அவர்களே வருகின்றனர். 
            
    ஒரு முறை தெருவில் மருதன் நடந்து செல்கையில், ஒரு சிறுவன் அவனிடம்  வந்து தொலைவில் இருக்கும் மலையைக் காண்பித்து அந்த மலைக்கு அப்பால் என்ன உள்ளது என்று கேட்டான். அந்த சிறுவனை அங்கு கூட்டி சென்று அங்கிருக்கும் சிற்றரசை வீழ்த்தி விட்டு அந்த சிறுவனையே அரியணையில் அமர்த்தினான் மருதன். அத்தகைய மனது மருதனுக்கு. அந்த சிறுவன் சூரியனையோ, நிலவையோ, நட்சத்திரங்களையோ காண்பிக்கவில்லை. அங்கும் சென்றிடுவான் மருதன். 

_________________________________________________________________________________  
        அன்றைய இரவு மருதன் கண்ட கனவு அவனையே மாற்றியது. தண்ணீரே இல்லாமல் போய்விடுகிறது கடநாட்டில். உலகில் செண்பக நாட்டைத் தவிர வேறு எங்கும் தண்ணீர் இல்லை. தண்ணீர் இன்றி விவசாயம் பொய்த்து விட்டது. உணவும் இல்லை.  ஊரில் முக்கால் வாசி உயிர்கள் உயிரிழக்கின்றன. முட்டி மோதி உருண்டு புரண்டு செண்பக நாட்டிற்கு செல்கிறான் மருதன். ஒரு பெண்மணி குவளையில் தண்ணீர் சுமந்து செல்வதை கண்டு தண்ணீர் கேட்கிறான். வேகமாக குடித்து முடிக்கிறான் மருதன்.

     "என் தந்தைக்கு உங்கள் வயது தான் இருக்கும். உங்களுக்கு தண்ணீர் கொடுப்பது என் தந்தைக்கே தண்ணீர் கொடுப்பது போல் உள்ளது. அவர் இப்போது இல்லை. மருதன் என்கிற மிருகம் என் தந்தையை கொன்று விட்டது. என் தந்தையை மட்டும் இல்லை, எங்கள் ஊரில் உள்ள அனைத்து ஆண்களையும். பிற உயிர்களை கொள்வதில் என்ன இன்பமோ? இதோ ஓடுகிறதே தண்ணீர், அன்று ரத்தம் ஓடியது. மன்னிக்கணும் அய்யா. என் துயரமெல்லாம் உங்களிடம் சொல்லிக் கொண்டு இருக்கிறேன்", என்றாள்.

        அதனைத் தொடர்ந்து அவன் கொன்று குவித்த முகங்களெல்லாம் வந்து தண்ணீர் கொடுத்தன. ஆறுதல் வார்த்தை சொல்லின. மக்கள் எல்லாம் செண்பக நாட்டிற்கு குடிபெயர்ந்தனர். அங்குள்ள பெண்கள் தாயைப் போல் வரவேற்றனர். கனவின் நிகழ்வுகளுக்கு நினைவில் கண்ணீர் சிந்தினான் மருதன். 

     அடுத்த நாளிலிருந்து அவன் செயல்கள் மாறுதலாய் இருந்தன. தனது நூற்றி மூன்றாவது குழந்தையை தூக்கி கொஞ்சினான். இருபதாவது மனைவி செய்திருந்த சமையலின் சுவையை வாழ்த்தினான். அவள் பெயரை கேட்டறிந்தான். 

          சில நாட்களுக்குப் பின் சதயநாட்டின் செல்வ வளங்களை அறிந்து அங்கு செல்லுமாறு திரம்பன் மருதனுக்கு ஆணையிட்டான்.
       "அரசே! படைவீரனின் வேலை நாட்டைக் காப்பது. எவரேனும் நம் நாட்டை தாக்க வேண்டும் என்று மனதில் நினைத்தால் அந்த நொடியே அவனை வெட்டி சாய்ப்பேன். மற்ற நாடுகளை சூறையாடுவது இல்லை அரசின் வேலை. அது கொள்ளைக் கூட்டத்தின் வேலை. நாம் சிறந்த நாடு. கொள்ளைக் கூட்டம் அல்ல."
    "திடீர் மாற்ற நாடகம். மருதா! நான் கூறுவதற்கு மறுப்பா? இது எல்லாம் சரித்தரித்தில் உள்ளனவே. ஒரு அரசு மற்ற அரசுடன் போர் முனைவது நாட்டை கையகப் படுத்துவது - இது எல்லாம் பொதுவாய் நடப்பதுவே. மக்களுக்கு வழங்கப்படும் மாதாந்திரத் தொகைக்கு எங்கு செல்வது? அவர்கள் வாழ்வு நிலை?"
     "மக்கள் உழைக்கட்டும் அரசே! நம் நாட்டில் இல்லாத வளமா? விவசாய நிலங்களெல்லாம் மக்களுக்கு என்று அறிவியுங்கள். மக்கள் அதன் மூலம் பயனடையட்டும். உலகெல்லாம் சென்று விற்கட்டும். பிற நாடுகள் எல்லாம் நமக்கு செய்யும் வேலைகளுக்கு கொடுக்கும் தொகையை நம் மக்களுக்கு கொடுங்கள். அவர்களுக்கு கிடைக்கட்டும். "
         "சிறையில் இடுங்கள் இவனை!"
    "என்னையா சிறையில் இடுவீர்!", மருதனின் வாள் வீச்சில் திரம்பனின் தலை முப்பது அடிகளுக்கு அப்பால் பறந்தது. 
       "மனிதர்களை மிருகம் ஆக்கி வைத்தவன் திரம்பன் தான். இன்றிலிருந்து நானே அரசன். அமைச்சர்களே! இன்றே நான் சொன்னதை எல்லாம் செயலாக்குங்கள். விவசாயம் பயிற்றுவிக்க சோழநாட்டு விவசாயிகளை அழையுங்கள்."
        தான் அகப்பற்றிய நாடுகளை எல்லாம் மீண்டும் அந்தந்த அரசுகளுக்கே வழங்கினான். மாற்று நாட்டுத் திருமணங்களை வரவேற்றான். திருமணமாகாத செண்பக நாட்டு பெண்களுக்கு தன்னாட்டு இளைஞர்களை மணம் முடித்து செண்பக நாட்டிற்கு அனுப்பினான். 
           
_________________________________________________________________________________

        கொண்டாடப்பட்ட மருதனுக்கு பைத்தியம் பிடித்தது. ஒரு கனவில் பிடித்த பைத்தியம். மன்னர் ஆக வேண்டி பைத்தியம். மன்னரிடம் நற்பெயர் வாங்க மருதன் தானாய் முன் சென்று சூறையாடிய நாடுகள் நாற்பத்தி இரண்டு. திடீரென்று போர் செய்யமாட்டாராம். மூப்பு, சென்ற போரில் தொடையில் வாங்கிய வெட்டால் மரண பயம். பித்தினை புரட்சி என்று அவனே கூறிக் கொண்டான். 
    மக்கள் இவனை அரசனாய் ஏற்று கொள்ள நிலங்கள், பரிசுகள். இதைக் கொடுத்தார் போல் கொடுத்துவிட்டு மானியங்களை நிறுத்திவிட்டான். கோகில நாடு போல் மக்களிடமே பணம் பிடுங்கி நாட்டை நடத்தும் நிலை வராதது மட்டும் தான் மீதம். 
      மூப்புத் தொற்றிட்டே! போர் செய்ய இயலாது. போரிட்ட நாடுகளை எல்லாம் அழைத்து நண்பர்களாக்கிக் கொண்டான். 

_________________________________________________________________________________

  மருதன் அனைத்து நாட்டினவரோடும் நன்கு நட்பு பாராட்டினான். அரசர்களை எல்லாம் ஒன்று சேர்த்து அனைவரும் இனி நட்பு பாராட்டுவதாகவும், பாதுகாப்புக்காக போர் என்ற நிலை மாற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினான். சுற்றியுள்ள நாடுகளெல்லாம் ஒதுக்கி வைத்திருந்த ஒரு நாட்டினை அந்நிலையில் இருந்து மீட்டான். அன்பு கரை புரண்டு ஓடியது. உலகெல்லாம் மருதனை கொண்டாடியது.

       சுயசரிதை வேறு எழுதினான், "முப்பத்தி ஏழு வயது வரை லட்சக்கணக்கில் மக்களை கொன்று குவித்தேன். ரத்தத்தில் .குளித்தேன். அதன் பிறகு ஒவ்வொரு நாளும் என் தூக்கத்தில் நான் கொன்றவர்கள் என்னை அன்பு பாராட்டினார்கள். பசிக்கு உணவு, தாகத்திற்கு தண்ணீர் இப்படி பல. கனவில் கூட பழி நினைக்காத அன்பு தேவதைகளை கொன்றேன். மிருகம் மனிதன் ஆக இப்போது வரை முயற்சிக்கறேன். ஒரு வாழ்க்கை - வன்மம், வெறி, பகை எதற்கு? அன்பு பாராட்டுவோம். நான் தினம் தினம் இறக்கிறேன் குற்ற உணர்ச்சியில். வெறுப்பு வேண்டாம். தீமைகளெல்லாம் என்னோடு முடியட்டும். அன்பே ஆயுதமாய் இருக்கட்டும்." இவ்வாறு முடித்து இருந்தார்.

_________________________________________________________________________________

        
     மருதன் வரலாற்றை மாற்றி சொல்ல ஒரு சுயசரிதை வேறு எழுதினான். தனது பைத்தியக்கார செயல்களை நியாயப் படுத்த. போர் மறந்த வீரன் நேரம் போக வேண்டுமே. மூப்பும் இயலாமையும் தான் காரணம் அனைத்திற்கும். மன்னனாய்த் தன்னை தானே அறிவித்தப் பின் ஒரு புது மணம் கிடையாது. இருந்த எந்த மனைவியும் கற்பம் தரிக்கவில்லை. அந்தப்புரமும் வேண்டாம் என்று விட்டான். 
      அன்பின் அடையாளம் என்றொரு அடையாளம் வேறு. 
      ஒரு லட்சம் கொலைகள். ஒரு நாட்டின் ஆண்களையே இல்லாமல் செய்தது. மகளை விட இளைய மனைவி. இதையெல்லாம் சுருக்க சொல்லி அன்பின் அடையாளமாய் காட்டிக் கொள்ள ஒரு புத்தகம்! இது தான் மருதனின் வாழ்க்கை.
         
        
      


  
                                

Tuesday, August 8, 2017

வெண்ணிலா - அவள் கண்கள்

இலைகளின் நடுவில் வெண்ணிலா
உன் திறந்த கண்களைப் போல!

மிக அருகில் வந்தாள் வெண்ணிலா
கயிறு கட்டி இழுத்து விடலாாம்
என எண்ண வைக்கும் தூரம்


நிலவைக் கூட்டி வந்து
இவள் இங்கே வாழும் நிலவு
என உன்னை அறிமுகம் செய்திருக்கலாம்

செய்யவில்லை
ஒரு வாளுக்கு ஒரு உறை போதும்
கயிற்றை கீழே போட்டுவிட்டேன்

Wednesday, July 5, 2017

Kaveri - The Mahanadhi

Mahanadhi - a Tamil movie from 1993. The movie should have been named as Kaveri. This movie is one of a kind which some of Kamal movies fall under - critically acclaimed, appreciated whenever telecasted in television, and of course a not so good performer at box office upon theatrical release.


There are many high points in this movie

(i) of course Kamalhasan and the other cast - Cochin Haneefa, Suganya, Shobana, Poornam Vishwanathan, SN Lakshmi and others,

(ii) Ilaiyaraaja's music - background score of the movie stood apart. For anyone, pointing out top 10 of Ilaiyaraaja's background score will be uphill task. Mahanadhi has to be there in it - for taking the emotions of the movie to another level.

(iii) Dialogues - Top notch dialogues. Episodes between Poornam Vishwanathan and Kamalhasan in prison is one example. Direction - Santhanabarathi

(iv) Many other aspects which made the movie so special.

These strengths are required for any movie to stand apart. This man made this movie even more special. His beautiful lines - Kavignar Vaali.

What is the story of Mahanadhi? A person from a village moves to Chennai, goes bankrupt, loses his family, goes to jail, gets released, finds his family members back, takes revenge and goes to jail, gets back to his place after serving his sentence in jail. This emotional drama had all its ingredients in correct place.

The makers made this timeless drama more special by making river Kaveri a prime character. This special character is made even more special by Vaali. Who can be a better person to write about Kaveri than Vaali, who had his best part of his life at its banks.

Another version of the story!
Kaveri, the Mahanadhi, makes the people who depend on it, happy and prosperous by giving away its water. All the areas it flows by is fertile. People make their living by farming making use of its water. The lives of the people around are mainly because of this river. The protagonist is a landlord and has a special bonding with the river. He praises the river (courtesy: Vaali), enjoys the life over there. Trouble starts when the protagonist moves beyond the vicinity of Kaveri. He loses its wealth that came to him because of Kaveri, he misses his children, goes to jail, comes back, fights to get his children, comes back to banks of Kaveri.. The makers have beautifully integrated Kaveri throughout the film. How? By building conversations between Kaveri and Kamalhasan through songs.

Yeah, the songs! Vaali, the legend uplifted the emotional drama to the best of its kind in Indian cinema so far.

Let us go through how he made it so special. The temple song from the family - Sriranga ranganathanin, the conversations songs - four songs in the same tune - Pongal song, Anbana thayai vittu, Engeyo thikku thesai and Thanmanam ulla nenjam - all written by Vaali made it special. The idea of having same tune at four different places has to be applauded.



Why these songs are special?

When the idea of a person's love to his land is conceived, they have made it a point - Kaveri, a prime character in the movie. Kamal's love to the river, in return the motherly love of river towards everyone have been well portrayed. Portrayed through ofcourse the Kamal's acting and the beautiful lines of Vaali. Let us go through the songs.


1. Sriranga ranganathanin

The first song of the movie - showing the protagonist's family. The song praises the lord Ranganathan and Kaveri, which forms the good life of most of the families in the Kaveri belt.
Kaveri is referred as Thengangai in pallavi. First charanam speaks about the Ranganathan. Second charanam praises the Kaveri.

Here goes the lines

Kannadam Thaai Veedu Ènrirunthaalum
Kanni Un Maruveedu Thennagamaagum
Gangaiyin Maelaana Kaaviri Theertham
Mangala Neeraada Munvinai Theerkkum
Neervannam Èngum Maevida Nanjai Punjaigal Paaradi
Oørvannam Ènna Køøruvaen Dhaeva Løagamae Thaanadi
Vaerengu Šendra Pøthilum Intha Inbangal Aethadi..


These lines portray how Kaveri is filled in the minds of Kamal and how it is seen godly.
It says Kaveri is holier than Ganga. It also says life cannot be this good in any other places.
The bond of the protagonist and Kaveri is well established in the song.

2. Pongalo Pongal

First of the songs of same tune.
Here goes the lyrics

Thai Pongalum Vanthathu Paalum Ponguthu 
Paattu Solladiyo
Vanna Mangaiyar Aadidum Mahaanathiyai
Potri Solladiyo
Intha Ponni Enbaval Thennaattavarkku Anbin Annaiyadi
Ival Thanneer Endroru Aadai Kattidum Theiva Mangaiyadi

Muppaattan Kaalam Thottu Muppogam Yaaraalae
Kalmaedu Thaandivarum Kaavaeri Neeraalae
Sethoda Saerntha Vithai Naathu Vidaathaa
Naathodu Sethi Solla Kaatru Varaathaa
Sevaazha Sengarumbu Saathi Malli Thottam Dhaan
Ellaamae Ingirukka Aethum Illa Vaattam Dhaan
Namma Sorgam Enbathu Mannil Ullathu Vaanil Illaiyadi
Namma Inbam Enbathu Kannil Ullathu Kanavil Illaiyadi



Thanneer Endroru Aadai Kattidum Theiva Mangai - Kaveri a Godly woman who wore water as her saree. What a writing by the great Vali! 

Pongal - a festival which is celebration of the land, farming etc., I am not diving deep into it since most of the readers would be Tamils and would be aware of Pongal. Other, please google and get more insights.

For people in the banks of Kaveri, all their wealth and life is due to the river. This song is a celebration song and it praises Kaveri throughout. It says all the living from their ancestors time is due to agriculture, which is because of the Kaveri. When there is this prosperity, this is the heaven in land, there is no heaven in skies - writes Vaali. Every farmer will agree to it. Where else can be a heaven?

Thus this song shows the love of people towards Kaveri and how they treat it. 

3. Anbana Thaayai vittu

Second of the same tune song
The song is how the land and Kaveri  are like mother and how it feels for the family leaving from the place

The lyrics goes like

Anbana Thaayai Vittu Engae Nee Ponalum
Neengaamal Unnai Sutrum Ennangal Ennaalum
Aiyaa Un Kaalgal Patta Bhoomi Saayumadi
Engaeyum Aethum Illa Eedu Sollumbadi
Kaveri Alaigal Vanthu Karaiyil Unnai Thaedidum
Kaanamal Varuthapattu Thalai Kuvinthu Oadidum
Oru Bantham Enbathum Paasam Enbathum Vaeru Vitta Idam
Ithai Vittalum Nenjai Vaazha Vaipathu Vaeru Entha Idam

Than Mannaivittoru Kuruvi Kudumbham Paranthu Poguthadi
Thaan Innal Varaikum Iruntha Kootai Maranthu Poguthadi
Intha Nenjil Ippadi Aasai Vanthoru Kolam Ittathadi
Ithil Nanmai Koodattum Theemai Oadattum Kaalam Vitta Vazhi..


Another great lyrics. Vaali being a person from the banks of Kaveri did great justice to this album. Be it Kaveri, Thamirabarani or any other river, it holds true. Which can be a better place than where ones roots were from?
The place/ Kaveri itself is considered as the mother here. The song says, the waves of Kaveri come and search for the protoganist and it go heads down not able to see him. Though separated, the Kaveri land says Nanmai koodattum and theemai odattum. Nature of mother is nature of Kaveri. Love you Vaali.
4. Engeyo thikku thesai
Third song of the same tune
Protagonist sings it after rescuing his daughter from brothel. Highly emotional scene of the movie. This songs starts with a Bengali rower singing great about Ganga. 
Here goes the lyrics
எங்கேயோ திக்கு திசை காணாத தூரம்தான்

அம்மாடி வந்ததென்ன என் வாழ்கை ஓடம்தான்


காவேரி தீரம் விட்டு கால்கள் வந்ததடி
காணாத சோகம் எல்லாம் கண்கள் கண்டதடி



கைமாறி நான் வளர்த்த பச்சைக்கிளி போனது
கண்ணார நானும்காண இத்தனை நாள் ஆனது



இரு கண்ணே செந்தமிழ்த்தேனே தந்தையின் பாசம் வென்றதடி
பசும் பொன்னே செவ்வந்திப்பூவே இத்துடன் சோகம் சென்றதடி
நான் கங்கா நதியை காணும் பொழுது உண்மை விளங்குது
அட இங்கே குளிக்கும் மனிதன் அழுக்கில் கங்கை கலங்குது
சில பொல்லா மனங்கள் பாவக்கறையை நீரில் கழுவுது
இந்த முட்டாள்தனத்தை எங்கே சொல்லி நானும் அழுவது


He confesses at this point, that all sorrows followed him when he moved out of the banks of Kaveri river through this song
5. Thanmanam ulla nenjam
Fourth song of the same tune
Thanmaanam Ulla Nenjam Ennalum Thaazhathu
Sevaanam Minnal Vetti Panneru Veezhathu
Kavaeri Thaai Madiyil Vaazhtha Pillaiyadi
Kaatradi Poal Irunthu Veezhvathilaiyadi
Ambana Uravu Kandu Koodukatti Aaduvaen
Annalil Naan Iruntha Vaazhkaiyathaan Thaeduvaen..

Andru Sonnaan Bharathi Solliya Vaarthaigal Thoatrathillaiyadi..
Enthan Ennam Ennum Tholvi Enbathai Aetrathillaiyadi..


The mood of the revenge. Starts with a Bharathiyar poem and comes to this song. The protagonist saying proudly that he grew up in the laps of Mother Kaveri and would not fall down like a kite. 
What songs! What a way to put it! No film has spoken about the love to a place like Mahanadhi did. Vaali took it to different league with his lyrics. Of course Ilaiyaraaja, the God of music and the genius Kamal Haasan. 
Hear the songs in the order I have mentioned. Movie will run through. You can relaize the love of the Mann and the man - Vaali.
I am not a person from Kaveri Land. So I will not be able to give full justice. Seeing his love, my love towards the mountain ranges, coconut trees, the palm plantains, Pazhaiyaaru, the beautiful breeze, scenic beauties of my place increased exponentially. Pazhaiyaaru is my Kaveri and Erachakulam is my swargam.
Had the name of the movie been Kaveri, it would have been - Actually I am not able to give a correct word here..


Wednesday, June 14, 2017

நற்பார்வைத் தருவாய் நடராஜா

தில்லை நடராசன் பெருமைகள் 
சொல்லில் அடங்காதவையாம் 

நந்தன் என்றொரு புலையன் 
சாதியினால் கோவில் செல்ல 
மறுக்கப் பட்டானாம் 
தேரடியில் இருந்தே தரிசித்தால் 
போதும் என்றிருந்தானாம் 
திருப்பன்கூரில் நந்தி சிலையே விலகியதாம்  

சிதம்பரம் கோவிலை தரிசிக்கவே 
வாழ்க்கை என்றிருந்தாராம் 
தாழ்த்தப்பட்டவர் நாயன்மாரில் 
ஒருவரான இடம் சிதம்பரம்!!

எத்தனைப் பாடல்கள் நடராசன் மேலே!!
நந்தன் கதை 
ஈர்க்கப்பட்டு கோவில் சென்றேன் 
இன்னும் பிரிவினைகள் அங்கே 
சாதியில் குறைந்து 
பணத்தால் உயர்ந்து 
கூட்டமே இல்லாத போதும் 
நடராசனை முன்னே நின்று காண 
நூறு ரூபாயாம்  
பார்க்க நன்றாக இருந்தது 
நந்தன் நம்பாடுவான் கருணை  
பூணுல் அணியாதோரும் முன்னே நின்றனர் 


வாசலில் அமர்ந்திருக்கும் இன்னொருவர் 
பத்தைக் காட்டினாலே 
பார்க்க விடுகிறார் 
பிரிவினைகளும் லஞ்சமும் 
கடவுளால் இல்லை!!
கடவுள் இருக்கும்(?) இடத்திலேயே உள்ளது!!

கொடுக்காது வெளியிலிருந்து 
பார்க்க இங்கே பலருக்கு மனமில்லை 
கோளாறுகள் அதிகம் ஆயினவே 
கண், மனம், சிந்தனை 
கொடுப்பவன் நிறுத்தினால் 
இது யாவும் மாறலாம் 
அங்கேயும் லஞ்சம் கொடுக்க 
தயார் செய்துவிட்டான்!!

நூறுக்கு வழியின்றி 
கள்ளத்தன பத்திற்கு மனமின்றி
வெளியிருந்து காணும்  கண்களை 
குறையின்றி வைத்திடு 
தில்லை நடராஜா!!
உன் கருணையெல்லாம் படித்தேன்!!
நீ செய்திடுவாய்!!

Saturday, March 11, 2017

கண்ணே என் கண்மணியே - தாலேலோ

பல்லவி:
கண்ணே என் கண்மணியே
அழகே என் செல்வமே
தளிரே என் தங்கமே
தூங்கு என் செல்லமே

சரணம் 1:
நிலவும் நட்சத்திரங்களும் நீ தூங்காமல் வாராதாம்
மின்மினிப்பூச்சிக்கூட ஆசையாய் மின்னாதாம்
ஆந்தைகள் கூட்டம் வந்து திட்டுதென்னை கண்மணியே
நீயும் கொஞ்சம் தூங்கு கண்ணே
தாலேலோ தாலேலோ

                              



சரணம் 2:
மயிலைத் தன் தோகை கொண்டு விசிறிவிட சொல்கிறேன்
குயிலையும் கொண்டு வந்து பாடிடச் செய்கிறேன்
சரஸ்வதி அவளும் வந்து வீணையிங்கு மீட்டணுமோ
நீயும் கொஞ்சம் தூங்கு கண்ணே
தாலேலோ தாலேலோ



இசையரசன் எங்கள் ராஜா இளையராஜா


பல்லவி:

பாடல்கள் பல்லாயிரம் தந்தார் இளையராஜா
தன்னிசியால் தாய்மடியை உணர்வித்தார் ராஜா
ஏழு ஸ்வரங்களால் எட்டாம் அதிசயம் ராஜா
ராகதேவன் இசையரசன் எங்கள் ராஜா இளையராஜா

சரணம் 1:

நாத்திகரும் இசை தெய்வம் இவரே என்பார்
ஆத்திகரோ இசைத் தூதர் இவரே என்பார்
பிள்ளைகளைத் தாலாட்டும்  நீலாம்பரி
இவர் தாரும் சுகமான பாடலொலி
இவர் கை அசைவில் வாத்தியங்கள்
சிந்தை வழி மெல்லிசைகள்
காற்றோடு இணை சேர்ந்து


பல்லவி:

பாடல்கள் பல்லாயிரம் தந்தார் இளையராஜா
தன்னிசியால் தாய்மடியை உணர்வித்தார் ராஜா
ஏழு ஸ்வரங்களால் எட்டாம் அதிசயம் ராஜா
ராகதேவன் இசையரசன் எங்கள் ராஜா இளையராஜா

சரணம் 2:

மூகாம்பிகை பெறாமகன் இவரே
ஞானத்தந்தை ரமணரின் வடிவே
தமிழ் காத்த பாண்டியரின் குலமே
இசைத்தமிழால் பூஜிக்கும் இசையே
இவரே இசையே
இவர்தந்த இசையாலே
மனம் யாவும் மகிழ்வாலே
இசை என்னும் வழியாலே
மருத்துவம்  செய்திட

கடை பல்லவி:

இன்னும்
பாடல்கள் பல்லாயிரம் தாரீர் இளையராஜா
உம்மிசையால் ஆயிரங்கள் சுகம் தாரீர் ராஜா
ஏழு ஸ்வரங்களால் எட்டாம் அதிசயம் ராஜா
ராகதேவன் இசையரசன் எங்கள் ராஜா இளையராஜா