Saturday, March 11, 2017

கண்ணே என் கண்மணியே - தாலேலோ

பல்லவி:
கண்ணே என் கண்மணியே
அழகே என் செல்வமே
தளிரே என் தங்கமே
தூங்கு என் செல்லமே

சரணம் 1:
நிலவும் நட்சத்திரங்களும் நீ தூங்காமல் வாராதாம்
மின்மினிப்பூச்சிக்கூட ஆசையாய் மின்னாதாம்
ஆந்தைகள் கூட்டம் வந்து திட்டுதென்னை கண்மணியே
நீயும் கொஞ்சம் தூங்கு கண்ணே
தாலேலோ தாலேலோ

                              



சரணம் 2:
மயிலைத் தன் தோகை கொண்டு விசிறிவிட சொல்கிறேன்
குயிலையும் கொண்டு வந்து பாடிடச் செய்கிறேன்
சரஸ்வதி அவளும் வந்து வீணையிங்கு மீட்டணுமோ
நீயும் கொஞ்சம் தூங்கு கண்ணே
தாலேலோ தாலேலோ



இசையரசன் எங்கள் ராஜா இளையராஜா


பல்லவி:

பாடல்கள் பல்லாயிரம் தந்தார் இளையராஜா
தன்னிசியால் தாய்மடியை உணர்வித்தார் ராஜா
ஏழு ஸ்வரங்களால் எட்டாம் அதிசயம் ராஜா
ராகதேவன் இசையரசன் எங்கள் ராஜா இளையராஜா

சரணம் 1:

நாத்திகரும் இசை தெய்வம் இவரே என்பார்
ஆத்திகரோ இசைத் தூதர் இவரே என்பார்
பிள்ளைகளைத் தாலாட்டும்  நீலாம்பரி
இவர் தாரும் சுகமான பாடலொலி
இவர் கை அசைவில் வாத்தியங்கள்
சிந்தை வழி மெல்லிசைகள்
காற்றோடு இணை சேர்ந்து


பல்லவி:

பாடல்கள் பல்லாயிரம் தந்தார் இளையராஜா
தன்னிசியால் தாய்மடியை உணர்வித்தார் ராஜா
ஏழு ஸ்வரங்களால் எட்டாம் அதிசயம் ராஜா
ராகதேவன் இசையரசன் எங்கள் ராஜா இளையராஜா

சரணம் 2:

மூகாம்பிகை பெறாமகன் இவரே
ஞானத்தந்தை ரமணரின் வடிவே
தமிழ் காத்த பாண்டியரின் குலமே
இசைத்தமிழால் பூஜிக்கும் இசையே
இவரே இசையே
இவர்தந்த இசையாலே
மனம் யாவும் மகிழ்வாலே
இசை என்னும் வழியாலே
மருத்துவம்  செய்திட

கடை பல்லவி:

இன்னும்
பாடல்கள் பல்லாயிரம் தாரீர் இளையராஜா
உம்மிசையால் ஆயிரங்கள் சுகம் தாரீர் ராஜா
ஏழு ஸ்வரங்களால் எட்டாம் அதிசயம் ராஜா
ராகதேவன் இசையரசன் எங்கள் ராஜா இளையராஜா