Monday, March 10, 2014

மருத்துவமனை வாயில் பிள்ளையார்


ஒருநாள் விடாது கண்ணீரபிஷேகம்  ஜலதோஷமோ
வெளிமாசில் தூசுபட்டு கண்வலியோ
உள்ளிருப்போர் கூச்சல் கேட்டு காதடைப்போ
உடைதேங்காய் உடல்பட்டு சிராய்ப்போ
இரவு குளிரில் காய்ச்சலோ
இவையாலே கோளாறோ
அதனாலே குணமாய் வெளிவருவோர் மட்டும் கண்படுவரோ
எல்லோரும் நலமென ஓயாத பெருமிதமோ
ஆஹா ஓஹோ கேட்கும் காதுகள்
ஐயோ ஐயகோ கேளாதோ

பணம்பிடுங்க வழியிருப்பின்
பிணத்திற்கும் இங்கே துட்டுவிளையாட்டு
ஒரு சிலார்க்கு மட்டும் கண் வலியோ
குறிப்பிட்ட வார்த்தைகளுக்கு மட்டும் காதடைப்போ
மருத்துவமனை வெளியே வெளி பார்த்து நீ
அதனாலோ இப்பெருமிதம்
உள்பக்கம் பார்த்திருப்பின்
மருத்துவ வியாபாரத்தில்
அறியாதோர் பணம் வீணாகாதோ
சிற்பி பின்கழுத்தில் கண்செதுக்கின்
இதை அறிந்திருப்பாயோ
மருத்துவம் மருத்துவமாய் இருக்க
பாலும் தேனும் பாகும் பருப்பும்
இவை நான்கும் கலந்துனக்கு தந்திடுவேன்
கடைசியில் உன்னிடமும் வியாபாரம்!