Wednesday, September 26, 2012

நான் நாயகி எண் இரண்டு

நாயகன்பால் அன்பு கொண்டு
அளவிலா காதல் செய்து
அறிவிலா நான்
அவன் அழகிலும் அறிவிலும் மயங்கி
கனாலோகத்தில் டூயட் பாட்டு என
சுகமாக சென்றது என் பாத்திரம்


இடைவேளை முன்னர்
சிற்றுண்டி சாலைக்கு
அவன் என்னை அழைத்து
காதலை சொன்னான்
காதலியோ நானில்லை
பக்கத்து நாற்காலியில்
பளிச்சென்ற ஆடையும்
அதீத அரிதாரமுமாய்
அழகு கூடி
பொய்யான அழகில் இன்னொருத்தி
எனக்கோ ஒப்பனை இல்லை

சட்டென உரைத்தது
கதை பற்றாக்குறையால் இணைக்கப்பட்டு
இடைவேளைக்கு பின்னர்
காதலனுக்கு தோழியாகி
இறுதி காட்சியில்
அவருக்கு குறி வைத்த குண்டை
நடுவினில் புகுந்து
என் மேல் வாங்கி
இன்னுயிர் நீக்கும்
இரண்டாவது கதாநாயகி என்னும்
தியாகச்செம்மல் நான் என்று