Saturday, May 12, 2018

தேடல் சிந்து

கண்கள் உன்னை தேடுதடி கண்மணி
கண்கள் உன்னை தேடுதடி கண்மணி

மழைக்காக ஏங்கும் உழவன் போல
உன்னை காண இங்கு ஏங்கி ஏங்கி
மழைக்காக ஏங்கும் உழவன் போல
உன்னை காண இங்கு ஏங்கி ஏங்கி


நீ சொல்லாய்
நீ சொல்லாய்
காரணங்கள் என்னவென்று
நீ சொல்லாய்
கண்ணுறங்கும் வேளையிலும்
மனமுறங்கா நிலைதந்து
எங்கே நீ உள்ளாயோ?
கண்முன்னே வாராயோ?
சொல்லடி சொல்லடி
கண்கள் உன்னை தேடுதடி கண்மணி
கண்கள் உன்னை தேடுதடி கண்மணி