Tuesday, July 5, 2016

என்னென்ன புண்ணியம் செய்தேனோ?


என்னென்ன புண்ணியம் செய்தேனோ?
இந்த வாழ்க்கை வாழத்தான்
என்னென்ன புண்ணியம் செய்தேனோ?


தென்பாறை, பூதபாண்டி அருகில், கன்னியாகுமரி மாவட்டம்

பச்சை நிறச்சட்டையாய் மலைக்கு செடிகள்
பாவம் மலைக்கு குளிரோ?
போர்வையாய் வாரும் மேகம்
கலப்படம் இல்லாத நீலவானம்
இந்த அழகினைக் காணத்தான்
கண்கள் இரண்டை வைத்தானோ?

           தென்பாறை, பூதபாண்டி அருகில் கன்னியாகுமரி மாவட்டம்

கண்ணுக்கு முன்னே வண்ண ஓவியம்!
பச்சை நிற மரங்கள்
நீலமும் பச்சையுமாய் அழகிய ஏரி
சிறகுகள் நீரில் படும்படி
பறந்து திரியும் வெண்ணிற கொக்கு
இந்த அழகினைக் காணத்தான்
கண்கள் இரண்டை வைத்தானோ?

தென்பாறை, பூதபாண்டி அருகில், கன்னியாகுமரி மாவட்டம்
காற்றின் ஒலி ஸ்வரமாக
நீர் பாறையில் மோதும் ஒலி தாளமாக
காற்றோடு இசை பாடும் பறவைகள் 
ஏழு ஸ்வரங்களில் இயற்கை கச்சேரி!
இதனைக் கேட்டிடத்தான் 
காதுகள் இரண்டை வைத்தானோ?

தென்பாறை, பூதபாண்டி அருகில், கன்னியாகுமரி மாவட்டம்

தேகம் தீண்டும் தென்றல் 
கண் வழியே மனம் ரசிக்கும் அழகு 
காது வழியே இதயம் கேட்கும் இயற்கை ஒலி 
நுரையீரல் குதூகலிக்க காற்று 
இவையாவையும் கண்டு கேட்டு உணர்ந்து 
பாறையில் அமர்ந்தவாறு நான் 

தென்பாறை, பூதபாண்டி அருகில், கன்னியாகுமரி மாவட்டம்  

இவையாவும் அனுபவிக்கவே 
உடலும் அதற்கு உயிரும் வைத்தானோ?
இந்த வாழ்க்கை வாழத்தானே
என்னென்ன புண்ணியம் செய்தேனோ?