Monday, February 2, 2015

ஒளி, கதிர், அலை - அம்மா

பல்லவி:

நிலாவின் ஒளியோ
சூரிய கதிரோ?
கருணை கடலின் அலையோ?

அனுபல்லவி :

வண்டெல்லாம் பசியாறும் தேனூறும் பூவோ இவள்?
தமிழ்மொழியில் கேட்கினிய சுகம்தாரும் சொல்லோ?

சரணம் 1:

பாசமலர் பூக்கும் கொடி
அன்புமழை பொழியும் முகில்
அரவணைப்பில் காந்தமென்றறியோ?

சரணம் 2:

கடுங்குளிரில் அனலிவளோ?
வெப்பத்த்தில் நிழல் இவளோ?
புவியியங்க ஈசன் தந்த கோளோ?

பல்லவி:

நிலாவின் ஒளியிவள்
சூரிய கதிரிவள்
கருணை கடலின் அலையிவள்
அம்மா!!

குந்தவராளி ராகத்தில் சுவாதி திருநாளின் போகீந்த்ர சாயினம் பாடல் போல அமையுமாறு எழுதப்பட்டது.

பாடல் கேட்க -