Thursday, September 7, 2017

மாவீரர் மகாத்மா காந்தி

கத்தியையும் வாளையும் ஏந்தி
எதிரணியை வெட்டி சாய்த்த வீரன்(?)
துப்பாக்கியும் பீரங்கியும் கொண்டு
மனிதர்களை சுட்டு வீழ்த்திய வீரன்(?)
வஞ்சமும் நஞ்சும் கொண்டு
தீபுத்தியினால் பலரை வீழ்த்திய வீரன்(?)
ஹிரோஷிமாவும் நாகசாகியும்
அழிய தன் விமானித்திலிருந்து
அணுகுண்டை செலுத்தினானே அவ்வீரன்(?)
சொன்னதை செய்தனர் இவ்வீரர்கள்(?)
வெற்றி அந்நேர மகிழ்ச்சி!
மாண்டவர் என்ன பாவம் செய்தனர்?
மிருகம் நிறைந்த மனிதத்தில்
பங்காய் இருப்பதை தவிர!
போர் புரிந்த போராளிகளாம் இவர்கள்!!

போராளிகளின் செயல்களே
அவர்கள் மனதை கொன்றிடுமே!
குற்ற உணர்வு வாட்டிடுமே!
தண்ணீரைப் பார்த்தாலும்
செந்நீராய்த் தெரியாதோ?

அன்பு வழி போர் செய்தானே
என் பாட்டன் காந்தி -
நிஜப் போராளி!
எதிரியை தாக்கிய ஆயுதம் அஹிம்சை
பிறரை வருத்தாது
தம்மை வருத்தி!
இந்தியர்கள் பொறுமையின் சிகரங்கள்!!
தாங்கிக் கொள்ளும் பக்குவத்தை
சரியாக பயன்படுத்திய போராளி!!
இக்குணம் மிகவும் பழகிவிட்டது
தற்போதைய இந்தியாவிற்கு!!
காந்தி வழி கிடைத்த சுதந்திரத்தை
சரியாகத் தொடரச் செய்வோம்!!