Wednesday, March 21, 2018

புத்தபெருமானே!

என்னே அழகு உன் சிரிப்பு!
போதி மரத்தின் கீழ்
மௌனமாய் அமர்ந்து
புன்சிரிப்பு மலர்ந்து
அதை கண்டார்
அதை சொல்ல
கேட்க வேண்டும்!




உன் சிலையின் சிரிப்பே
மனத்தின் பாதாளம் வரை சென்று
அமைதி தர,
நேரில் கண்டோர்
பேரின்பம் பேரமைதி
அன்றோ கொண்டிருப்பர்!
தெருவெல்லாம் இங்கே பிள்ளையார் போல
அங்கே தெருவெல்லாம் நீ!
மலர் கொண்டு உன்னை வணங்கும் பக்தி
நேரில் எத்தனை அன்பு அவர்களுக்கு
நட்பு பாராட்டும் உணர்வு

அவ்வப்போது அரக்கர்களாய்
செந்நீர் பார்த்து மகிழும் சிலர் மட்டும்
உன் புன்னகை காண மறந்திருப்பாரோ?
இன்று கண்டி வரை
உன் கோவில் அருகிலும் செந்நீர் வந்துவிடும்  போல
இன்னும் புன்னகைத்து அமைதி தருகிறாய்
உன்னை வணங்குவோர் சிலர்
உன் புன்னகை பார்ப்பதில்லை
அவர்கள் கண்படுமாய் புன்னகை வீசு!
உன் முகம் பார்த்தால்
கத்தி எடுக்க அல்ல கத்திப் பேசவும் மனம் வருமோ
புத்தபெருமானே?