Thursday, September 24, 2015

நல்லறமாலை - நல்லதை தினம் நினைத்திடு மனமே

பாடலாய்:


பல்லவி: (ராகம்: ரஞ்சனி)

நல்லதை தினம் நினைத்திடு மனமே
நல்லதை தினம் நினைத்திடு மனமே

சரணம் 1: (ராகம்: ஸ்ரீரஞ்சனி)

அன்பும் அறமுமாய் பண்பும் பயனுமாய்
நல்ல ஒழுக்கமுமாய்
நீ இருப்பாய் நீ இருப்பாய்


சரணம் 2: (ராகம்: மேகரஞ்சனி)

வாய்மை நிறைந்த மனதில் நீ
உலாவும் வெளிச்சம் நீ தெளிவும் நீ
நல்ல அறமும் நீ நல்லறமும் நீ

சரணம் 3: (ராகம்: ஜனரஞ்சனி)

ஈதலால் வரும் புகழும் நீ நற்பெயரும் நீ
வருவோர்க்கு வழங்கிடும் குணமும் நீ
நற்புகழும் நீ நல்லறமும் நீ

Saturday, September 19, 2015

நதிகள் இணைப்பு பாடல்


பாடலாக

பாடல் வரிகள்

பல்லவி:

வளைந்து வளைந்து வரும் காவிரி நதியே
கங்கையோடு இணையாயோ

அனுபல்லவி:

வங்கக் கடல் சேரும் மகாநதியே
நீ அரபிக் கடல் சேராயோ


சரணம் 1:

பாலையாய் போகும் பாலாற்றிலே
பாலாய் ஓடிடு கிருஷ்ணா
அழகர் இறங்கிடும் வைகைதனிலே
சிந்துவும் தபதியும் சேராதோ

சரணம் 2:

சிறுவாணி நீரின் சுவை பூர்ணாவில் சேரும்
காவிரி நீரின் சுவை கூவமும் அடையும்
துங்கையும் இங்கே பொன்னையில் கலந்திட
பயிர்களும் செழிக்கும் வயிர்களும் நிறையும்

Monday, September 14, 2015

முருகன் பாட்டு - மயில் மீது ஆடிடும்

கைலாஷ் கேரின் தில்ருபா பாடல் மெட்டிற்கு எழுதியது.

பாடலாக


பல்லவி:

மயில் மீது ஆடிடும் குமரா முருகா
மயில் மீது ஆடிடும் குமரா முருகா
வேலவா சண்முகா அழைக்கிறோம் முன்னர் வா
மயில் மீது ஆடிடும் குமரா முருகா
மயில் மீது ஆடிடும் குமரா முருகா 


சரணம் 1:

பக்தரெல்லாம் கூடி நின்று ஆரோஹரா என்பர்
காவடியும் சுமந்து வந்து உந்தன் அடி சேர்வர்
உந்தன் பெயர் சொல்லி சொல்லி மலைமீது ஏறி
கோபுரம் தான் கண்ட பின்னே பரவசம் கொள்வர்
வேலவன் வேலினை கண்டதும் ஆனந்தம்

சரணம் 2:

வீரமுண்டு காதலுண்டு ரெண்டும் சேர்ந்த வேலவா
தமிழாக ஆகி நிற்கும் கலிதீர்க்கும் சண்முகா
சிவனுக்கு பாடம் தந்தாய் சுவாமிமலை ஏறி
உம்மை காண நாமும் வந்தோம் சந்தனம் பூசி
கந்தனாய் வேலனாய் நிற்கிறாய் சண்முகா

Saturday, September 12, 2015

கிருஷ்ணன் பாட்டு - இன்னும் என்ன கோபமோ

புரந்தரதாசர் அவர்களின் கன்னட பாடலான ராம மந்த்ரவ ஜபிசோ பாடலின் மெட்டிற்கு எழுதப்பட்டது

பல்லவி:

இன்னும் என்ன கோபமோ என்மேலே
இன்னும் என்ன கோபமோ கிருஷ்ணா

அனுபல்லவி:

பூவாலும் பாவாலும் உன்னையே தொழுதேனே
வெண்ணெய் பால் இவைகொண்டு நைவைத்யம் செய்தேனே



சரணம்:

பஜனைகள் பாடியும் தீராது ஒரு கோபம்
கீதையை தந்தோனே ஏன் இந்த தனி கோபம்
மந்திரம் பல சொல்லி தனியாத ஒரு கோபம்
கிருஷ்ணா என்றுருகி குறையாத ஒரு கோபம்

பாடலாக

https://soundcloud.com/ramanan-venkatasubramaniam/innum-enna-kobamo-ragam