Monday, September 14, 2015

முருகன் பாட்டு - மயில் மீது ஆடிடும்

கைலாஷ் கேரின் தில்ருபா பாடல் மெட்டிற்கு எழுதியது.

பாடலாக


பல்லவி:

மயில் மீது ஆடிடும் குமரா முருகா
மயில் மீது ஆடிடும் குமரா முருகா
வேலவா சண்முகா அழைக்கிறோம் முன்னர் வா
மயில் மீது ஆடிடும் குமரா முருகா
மயில் மீது ஆடிடும் குமரா முருகா 


சரணம் 1:

பக்தரெல்லாம் கூடி நின்று ஆரோஹரா என்பர்
காவடியும் சுமந்து வந்து உந்தன் அடி சேர்வர்
உந்தன் பெயர் சொல்லி சொல்லி மலைமீது ஏறி
கோபுரம் தான் கண்ட பின்னே பரவசம் கொள்வர்
வேலவன் வேலினை கண்டதும் ஆனந்தம்

சரணம் 2:

வீரமுண்டு காதலுண்டு ரெண்டும் சேர்ந்த வேலவா
தமிழாக ஆகி நிற்கும் கலிதீர்க்கும் சண்முகா
சிவனுக்கு பாடம் தந்தாய் சுவாமிமலை ஏறி
உம்மை காண நாமும் வந்தோம் சந்தனம் பூசி
கந்தனாய் வேலனாய் நிற்கிறாய் சண்முகா

No comments:

Post a Comment