Tuesday, November 5, 2013

பிரிவு


தும்மிய போதெல்லாம்
யாரோ நினைக்கிறார்கள் என்பாள்
இப்போது தும்மல் வந்து பலமாதம்
மனதுக்கு பிடித்தவர்கள் நினைத்தால் 
தும்மல் வராது என்று 
சொல்லாமல் விட்டுவிட்டாள்
பின்னர் வாழ்நாள் முழுதும் 
தும்மியே இருத்தல் வேண்டுமே 



மனதிற்கு பிடித்தவர்களிடமிருந்து வெகுதூரம் சென்று
அவர்தம் சுவாசத்தை அருகிலிருந்து உணராது
நினைவினாலே நிழலுலகத்தில் முத்தமிட்டு
பிரிவினை சுகமாக்கும் ஜீவன்கள்
பகுதி நேர நிழலுலக வாசிகள்

உறவுகள் பிரிந்தால் இறுக்கம் கூடுமாம் 
வேதனையும் கூடும் என்பதை
மறந்துவிட்டான் அந்த கவிஞன் 
நினைவுகள் மனதை விட்டு பிரியாது 
நினைவுகளால் இறுக்கம் கூடும் வேதனையோடு
சொல்லிவிட்டேன் இந்த கவிஞன்  

No comments:

Post a Comment