Thursday, October 18, 2012

ஒன்றரை மணிநேரம் (பத்து கண்களில்)

முதல் இரண்டு கண்கள் - சுபா ஹரிஹரன் - வயது 29
                                           
                                                "ஆதித்யா மணிய பாரு. சின்ன முள் 9 லயும் பெரிய முள் 12 லயும் இருக்கு. நாளைக்கு தேவயான புக்ஸ்லாம எடுத்து வை. அனிருத்துக்கும் ஹெல்ப் பண்ணு. அனிருத் அண்ணா கிட்ட டைம்டேபிள் காட்டு டா." சுபா தன் குழந்தைகளிடம் கூறினாள். இந்த புது வீட்டுக்கு மாறி ஒரு வாரம்  தான் ஆகுது. சொந்த வீடு. டிவில சூப்பர் சிங்கர் வேற. எல்லாரோட கவனமும் அதுல தான் இருந்தது. கிட்சென்ல பாத்திரம் தேச்சிக்கிட்டுருந்தா சுபா. பசங்க வேலைய முடிசிடாங்களானு கிட்சென்ல இருந்தே குரல் கொடுத்தா. பசங்க கிட்ட இருந்து எந்த பதிலும் வரல. திருப்பி பல தடவ கூப்பிட்டும் எந்த பதிலும் வரல.பசங்கள திட்டிகிட்டே பேட்ரூம்கு வந்தா சுபா. கதவு சாத்தி இருந்தது. உள் பக்கமா பூட்டி இருந்தது. அழுத்தினாலே பூட்டிக்கரமாரி இருக்கற பூட்டு அது. வெளில இருந்து தொறக்கனும் நா சாவி வேணும். கைய்யால தெறந்து பாத்தா முடியல அப்ப தான் புரிஞ்சது உள்ள லாக் ஆயிருக்குன்னு. வெளில இருந்து கதவ தொறனு கத்தினா யூசே இல்ல. என்னா அந்த ரூம் சவுண்ட் ப்ரூப் வேற. சுபா சொல்றது பசங்களுக்கு கேக்காது. பசங்க பேசறதும் இவளுக்கு கேக்காது. கதவ தட்டினா பசங்க கதவு கிட்ட இருந்தா கேக்கலாம். ஆதித்யா அனிருத் கதவ தொறங்க டா கத்தி அழ ஆரம்பிச்சா சுபா. இத கேட்டு, டிவி பாத்துட்டு இருந்த ஹரி வேகமா வந்தாரு. "அழாத சாவி இருக்குல அப்பறம் என்ன. இப்ப தொறந்துட போறேன். மொதல்ல நீ அழுகைய நிப்பாட்டு."  "சாவி போட்டும் கதவ தொறக்க முடியல. என்ன ஆச்சுனு தெரியலையே. வெளிலே ஜன்னலும் லாக் ஆயிருக்கு. ஐயோ" திரும்ப அழ ஆரம்பிச்சா சுபா.
                                                  இது மாறி ரெண்டாவது தடவ நடக்குது. அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி புவனா கல்யாணத்துல ஆதித்யா காணாம போயிட்டான். அனிருத் அப்ப பிறக்கல.  மண்டபம் புல்லா தேடியும் கெடைக்கல. அரமணிநேரம் கழிச்சு ஒருத்தர் தண்ணி தொட்டில இருக்கறத சொன்னாரு. கழுத்து வரைக்கும் தண்ணி இருந்தது.
                                                   "நான் கவனமா இருந்தருக்கனும். புவனா கல்யாணத்துலயே தண்ணில மூழ்கிட்டு இருப்பான்.வீசிங் வேற அவனுக்கு. இந்த அனிருத்துக்கு பசிச்சா கூட சொல்ல தெரியாது. சின்ன கொழந்த அவன். ஐயோ முருகா."  செவுருல மாட்டியிருந்த பசங்களோட போட்டோவ எடுத்து அழ ஆரம்பிச்சா. அனிருத் பர்ஸ்ட் பர்த்டேக்கு எடுத்த போட்டோ அது. அவ பேய் பிடிச்ச மாதிரி ஆயிட்டா. அவ கண் ஒரு தடவ கூட இமைக்கல.


                                                 "9:30 ஆயிடுச்சு. யூசுவலா இப்ப தூங்கிடுவாங்க. இப்ப என்ன பண்றாங்கனே தெரியலயே. அனிருத் நான் இல்லாம தூங்கக்கூட மாட்டான். பத்து மணியானா அரமணிநேரம் கரண்ட் கட் ஆய்டும். அவங்களுக்கு எதாவது ஆச்சுனா நான் செத்தே போய்டுவேன். காக்க காக்க கனகவேல் காக்க..." சுபா கூச்சலிட்டு கந்த சஷ்டி கவசம் சொல்ல ஆரம்பித்தாள். கார்பென்டர் வந்தார். பூட்டை உடைக்க டிரில்லிங் மசின் வேற. சுவிட்ச் போட்ட விடனே கரண்ட் கட். சுபா திருப்பி அழ ஆரம்பிச்சா. அழுது அழுது கண்ணீரே நின்துடுச்சு வீசிங் வேற. பில்டிங் இன்ஜினியர்  வந்து என்ன ப்ராப்ளம்னு பாத்துட்டு ட்ரில்லே பண்ணிடலாம்னு முடிவுக்கு வந்தாங்க. கரண்ட் வந்துச்சு. கதவ தொறந்து பாத்தா ஆதித்யாவும் அனிருத்தும்.......

மூன்றாவது மட்டும் நான்காவது கண்கள் - ஹரிஹரன் வயது 34
ஐந்தாவது மற்றும் ஆறாவது கண்கள் - விஸ்வநாதன் வயது 48  

                                                 ராத்திரி 9 இருக்கும். ஹரி சூப்பர் சிங்கர் பாத்துட்டு இருந்தாரு. கோயம்புத்தூர்ல இருந்து சென்னை வந்து ஒரு வாரம் தான் ஆகுது. சொந்த வீடு வேற. டிவி பாத்துட்டு இருக்கறச்ச சுபா கதவ தட்டிகிட்டே அழற சத்தம் கேட்டுச்சு. வேகமா ஓடி போய் பாத்தா பசங்க உள்ள மாடிகிட்டங்கனு தெரிஞ்சுது. சாவி போட்டும் தொறக்க முடியல. உடனே விஸ்வநாதனுக்கு போன் போட்டாரு. விஸ்வநாதன் குடும்பத்துல இல்ல யாருனாலும் உதவினு கேட்டா  செய்யரவரு. பக்கத்து தெரு தான்.  விஸ்வநாதன் உடனே இந்த பில்டிங் கட்டின இன்ஜினியருக்கு போன் பண்ணி கதவ தொறக்க முடியலன்னு சொன்னாரு. இன்ஜினியர், "சார் நான் இப்போ இங்க சேப்பாக்கத்துல மேட்ச் பாத்துட்டு இருக்கேன். அவசரமா?" னு கேட்டாரு
"சார் ரெண்டு கொழந்தைங்க உள்ள மாட்டிருகாங்க "
"அப்படியா சார். உடனே கெளம்பி வரேன். லோக்கல் கார்பென்டர் யாரவது இருந்தா  ட்ரை பண்ணுங்களேன். நான் வரதுக்குள்ளே. "
"பண்றேன் சார்"
                                              விஸ்வநாதன் கார்பெண்டர வீட்டுக்கே போய் கூட்டிட்டு வந்துடறேன்னு பைக் ஸ்டார்ட் பண்ணாரு. அவருக்கு அனிருத் முகம் கண் முன்னாடியே இருந்தது.  லீவ் அப்ப சென்னை வந்தா விஸ்வநாதன் வீட்ல தான் இருப்பாங்க. அனிருத் முகத்த பாக்கும் போதுலாம் ஏதோ சந்தோசமா இருக்கும். அதுனால இவரும் மாசம் ஒருதடவ கோயம்புத்தூர் போய்டுவாரு.
                                               வீட்ல சுபா பிரம்ம புடிச்ச மாறி இருந்தா. ஒரு மூலைல ஒக்காந்துட்டு கண் சிமிட்டாம பசங்க போட்டோவ பாத்துட்டு இருந்தா. ஹரி அப்பப்ப கதவ தட்டிட்டே இருந்தான். எப்பயாச்சு பசங்க திருப்பி தட்டாமையா போய்டுவாங்கனு ஒரு நம்பிக்க. ஹரிக்கும் பயமா தான் இருந்தது, ஆனா பயத்த காமிச்சா இன்னும் சுபா டென்ஷன் ஆய்டுவாளே. அவளுக்கும் வீசிங் இருக்கு. அதுனாலே டென்ஷன் இல்லாதவன் மாதிரி சுபா கிட்ட வந்து சொன்னான், "சுபா இங்க பாரு இது ஒன்னோட தப்பும் இல்ல பசங்க தப்பும் இல்ல. இங்க பாரு அழாதே. அவங்களுக்கு எதுவும் ஆகாது. மிஞ்சி மிஞ்சி போனா அழுவாங்க இப்ப நீ அழற மாதிரி. விச்சண்ணா  கார்பெண்டர கூப்ட போயிருக்காரு. தொறந்துரலாம். அழாதே. நான் தானே சவுண்ட் ப்ரூப் இந்த மாதிரி பூட்டுலாம் இன்ஜினியர் கிட்ட போட சொன்னேன். நான் தான் அழனும் நியாயமா.. அழாதே. வீசிங் வேற ஆரம்பிக்குது."  சுபா கந்த சஷ்டி கவசம் சொல்ல ஆரம்பிச்சா ஹரி மடில படுத்துகிட்டு.


                                              விஸ்வநாதன் கார்பெண்டர கூட்டிட்டு வந்தாரு. பூட்ட பாத்துட்டு  "என்னங்க இந்த மாறி பூட்ட ஒடச்சதே இல்லையே. டிரில் பண்ணிடலாம். ட்ரில்லிங் மெசின் வீட்ல இருக்கு போய் எடுத்துட்டு வந்துடலாம். வண்டிய எடுங்க." விஸ்வநாதன் வண்டிய எடுத்தாரு. சுபா பூஜ ரூமுக்கு போய்ட்டா. ஹரி பால்கனிக்கு போய் இவளோ நேரம் அடக்கி வெச்சிருந்த பயத்தையும் சோகத்தையும் அழுகையா வெளிபடுத்தினான்.
                                             கார்பெண்டர் பிளக்க மாட்டினவுடனே கரென்ட் வேற போய்டுச்சு. இன்ஜினியர் 10:20 க்கு வந்தாரு. கதவ பாத்துட்டு  "மேல் பகுதில அலைன்மன்ட் செரி இல்ல. அதனாலத்தான் திறக்க முடியல." னு சொன்னாரு.
"ஏன் சார். உள்ள ரெண்டு சின்ன கொழந்தைங்க மாட்டிட்டு இருக்காங்க. நீங்க கன்ஸ்ட்ரக்ஷன் பால்ட் பத்தி பேசிட்டு இருக்கீங்க. பொம்பள இருக்காளேனு  பாக்கறேன் இல்லாட்டி அசிங்கமா சொல்லிடுவேன். முட்டாள் இன்ஜினியர்."
 கத்தி தீத்தாரு விஸ்வநாதன். கரண்ட் வந்தது. இன்ஜினியரே கதவ டிரில் பண்ணி தொறந்தாரு. உள்ள ஆதித்யாவும் அனிருத்தும்.....

மிச்ச நாலு கண்கள்- ஆதித்யா வயது 7, அனிருத் வயது 3

                                           அம்மா சொன்னவுடனே ஆதித்யாவும் அனிருத்தும் ரூமுக்குள்ள போனாங்க. அழுத்தர மாதிரி பூட்டுல இருக்கே அழுத்துவோம் அழுத்தினான் அனிருத். ஆதித்ய புக்ஸ் அரேன்ஜ்  பண்ண ஆரம்பிச்சான். அனிருத்துக்கும் பண்ணி கொடுத்தான். ஆதித்யா அனிருத் கிட்ட சொன்னான், "அனிருத் பாரு உனக்கு எப்டி வேத்துருக்கு. போய் கதவ சாத்து. ஏசி போடலாம்." கதவ சாத்தினான் அனிருத். ஏற்கனவே பூட்ட அழுத்தினதால கதவு பூட்டிகிச்சு. இந்த விஷயம் பசங்களக்கு தெரியாது.
                                           ஆதித்யா டிவி ஆன் பண்ணினான். அனிருத்துக்கு கதவு கிட்ட ஏதோ சத்தம் கேட்டது. "அண்ணா கதவுல சத்தம் கேட்டது." கூறினான் அண்ணா கிட்டே. "அப்பா சொன்னாரு அந்த ரூம்ல பட்டாசு வெடிச்சாலும் இங்க கேகாதுனு. அவர் கிட்ட சொல்லணும்." ரெண்டு பேரும் ஒரே நேரத்துல சொன்னங்க "அப்பா சத்தம் கேக்குது." ஒவ்வொரு தடவ கதவ தட்டற சத்தம் கேக்கும்போதும் சொன்னாங்க.
                                           ஆதித்யா மணிய பாத்துட்டு அனிருத் கிட்ட சொன்னான். "அன்னு சின்ன முள்ளு 9லயும் பெரிய முள்ளு 6லயும் இருக்கு. இப்ப நாம தூங்காட்டி அம்மா திட்டுவா." அனிருத் அம்மா வேணும்னு அழ ஆரம்பிச்சான்.  ஆதித்யாக்கும் பயம் வந்தது. அந்த நேரம் பாத்து டிவில வை திஸ் கொலவெறி பாட்டு வந்தது. ரெண்டு பெரும் பயத்த மறந்துட்டு டான்ஸ் ஆட ஆரம்பிச்சாங்க. பாட்டு முடிஞ்சதும் அனிருத் திரும்ப அழுதான். ஆதித்யா பீரோல இருந்து ரெண்டு சாரீ எடுத்து அனிருத் கிட்ட ஒன்னு கொடுத்தான்.அவன் அம்மா அனிருத் தூங்க வைக்க பாடுற கண்ணே கலைமனேன்கர பாட்ட பாடி அனிருத்த தூங்கவும் வெச்சான். அப்படியே அவனும் தூங்கிட்டான்.
                                           திடீர்னு கதவுல இருந்து  பயங்கரமான சத்தம் வந்துச்சு. ரெண்டு பேரும் எழுந்து கதவுகிட்ட போனா யாரோ கதவ தொறந்தாங்க. அவர் கிட்ட ஒரு மிசின் இருந்தது.

பத்து கண்களும் சேர்ந்து
                                         
                                          சுபா ரெண்டு பசங்களையும் கட்டி பிடிச்சா. முத்தமும் கொடுத்தா. "அம்மா, அனிருத் தூங்கல. அப்பறம் நான் கண்ணே கலைமானே பாடினேனா தூங்கிட்டான். என்ன வீசிங்காமா. என்னாச்சு?" கேட்டான் ஆதித்யா. அனிருத் வேகமா அப்பா கிட்ட போய், "ஹரிப்பா உள்ள கதவுல சத்தம் கேட்டுது. நான் கூட கேட்டதுன்னு சொன்னேனே. ஆதியும் சொன்னான். அதான் இந்த அங்கிள் செரி பண்ணாரா?" மழலையா கேட்டான். ஹரியோட அப்பா அவர் ரூம்ல இருந்து வந்து, "நாங்க எங்காத்துல ம்ரித்துன்ஜயா ஹோமம் பண்ணிருக்கோம். எந்த தப்பும் நடக்காது. போய் தூங்குங்கோ. யோவ் இன்ஜினியர் என்ன யா கட்டிருக்க?  ம்ரித்துன்ஜயா ஹோமத்தால இப்போ என் பேரன்க நல்லா இருக்கா. நீங்க தப்பு பண்ணலாம் யா. மனுஷாள் தானே. என் ம்ரிதின்ஜயா தேவி தப்பு பண்ணமாட்டா. நல்ல எல்லாத்தையும் படிச்சிண்டு வா திருப்பி. நாளைக்கு கொஸ்டின் கேப்பேன் பாத்துக்கோ." என சொன்னார்.விஸ்வநாதன் பசங்களுக்கு முத்தம் கொடுத்துட்டு அவர் வீட்டுக்கு கெளம்பினார்.
                                         ரெண்டு நாள் கழிச்சி, ஆதித்யா வேகமா ரூமுக்குள்ள போய் உள்பக்கமா பூட்டினான். சுபா சாவிய வெச்சு தொறந்து ஒரு அற விட்டா. அழுதுட்டே கேட்டான் ஆதித்யா, "அன்னிக்கி மட்டும் கிஸ் கொடுத்த. இப்போ ஏன் அடிக்கற." சுபா அறஞ்ச கன்னத்துல  ஒரு முத்தம் கொடுத்தா.
                 
                                            

No comments:

Post a Comment