Thursday, October 18, 2012

கிருஷ்ணா நீ பேகனே - அவளைத் தேடி

                     "ரமேஷ் ராதா கல்யாணம் இன்விடேசன் வந்துருக்கு டா. சனிக்கிழம.  லஞ்சும் உண்டாம். பாயாசத்தோட இருக்கும். பாயாசம் சாப்டு ரொம்ப நாள் ஆச்சு. போவோமா? இந்த பீட்சா பர்கர்க்குலாம் ஒரு வேள லீவ் விடுவோமே.", ரவி கேட்டான்.
                     "புது ப்ராடக்ட பத்தி சில பேர் கிட்ட அபிப்ராயம் கேட்டு ரிசல்ட் ரெடி பண்ணனும் டா ரவி. எத்தன தடவ தான் ராதாவுக்கும் கிருஷ்ணருக்கும் கல்யாணம் பண்ணுவாங்க? ஒருத்தர் ஒருத்தர கல்யாணம் பண்ணலாம். ஒருத்தர் நெறைய பொண்ணுங்கள கல்யாணம் பண்ணினதையும் கேள்வி பட்டுருக்கேன். இது என்ன ஒருத்தர் ஒருத்தரயே பலதடவ கல்யாணம் பண்றது. இது என்ன பாலிமோநோகமியா? பாயாசம் தான் மிஸ் பண்ணுவோமேனு இருக்கு. பரவாலே சாப்பாடு பார்சல் கட்டிக்கோ "
                    "யார் கிட்ட அபிப்ராயம் கேக்கணும்?"
                    "கார்போரேட்ஸ்ல ஹையர் அபிசியல்ஸ் டா. போன் பண்ணி அப்பாயிண்ட்மென்ட் வாங்கனும்."
                     "நீ சொன்னவங்களாம் ஒரு எடத்துல கூடி அவங்க கிட்ட நீ உன் சோ கால்ட் அபிப்ராயத்த கேட்டா?"
                    "வெல் அண்ட் குட்"
                    "அப்ப நீ ராதா கல்யாணத்துக்கு வர."
                    "எப்பிடி?"
                    "ரோலால இருக்க எல்லா ஹிந்து பேமிலியும் வரும். அதுல நெறைய பேர் CEO, MD இப்பிடிலாம் இருக்கா. நீ பஜனைல எல்லார் கண் படரமாரி நல்லா எந்துவா பாடு. உன் பேர் என்ன, ஊர் என்ன அப்படின்னு கேப்பா. நீ அப்டியே உன் மேட்டர கறந்துடு."
                  "ஐடியா நல்லா தான் இருக்கு. பாயாசமும் ஆச்சு, வேலையும் ஆச்சு. போலாம். டன். எங்க நடக்குது. "
                 "ஸ்ரீனிவாசன் சார் வீட்ல."
                  "ஓ ஜப்பான் போய்ட்டு ஒரு சப்பமூக்கு காரிய கல்யாணம் பண்ணிட்டு வந்தாரே அவரா? ஞாபகம் இருக்கு. தீபாவளி பங்க்ஷன்ல நல்லா பேசினாரு."
               
                   ரோலா, அமெரிக்காவில் மிசோரி மகாணத்தின் நகரம். மற்ற நகரங்களை போல நூற்றுக்கணக்கில் இந்தியர்களை கொண்ட நகரம். தமிழர்கள் எண்ணிக்கை இந்தியர்களில் பெரும் பங்கை கொண்டது. பண்டிகை காலங்களில் ஒன்று கூடி கொண்டாடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர் இவர்கள். அப்போது என்ன செய்வீர்கள் என கேட்டோமானால்.
பெண்கள்,"நகையபத்தி டிஸ்கஸ் பண்ணுவோம்" என்றும்
"எங்க சொந்தக்காராலாம் இந்தியால இருக்கா. இந்த மாறி இவா எல்லாரையும் பாக்கரச்சே அவாள பாத்த மாறி சந்தோசமா இருக்கு.", என்று சில பெருசுகளும்
"டேட் அண்ட் மாம் டுக் அஸ் ஹியர்.", என்று குட்டீஸ்களும்
"இன்டர்நெட்ல சங்கீதம் கேட்டு போர் அடிச்சிருத்து அதான் இங்க வந்தேன்" என்று மாமாக்களும்
"பியூட்டிபுல் லேடீஸ் இன் சாரீஸ்", என இளசுகளும்
கூறினாலும் எல்லோரும் சொன்ன ஒரு பொதுவான ரீசன்
"அம்புஜம் மாமி பாயாசம்."
               
                    சனிக்கிழமை வந்தது. மொத்தம் 300 பேர் கூடியிருந்தனர் ராதா கல்யாணத்துக்கு. ஸ்ரீனிவாசனின் வீடு அரண்மனை போல இருந்தது. இந்த 300 பேர் தவிர இன்னும் 200 பேர் அமரலாம். பஜனை செய்ய ஒரு சிறப்பு குழு இருக்கிறது. அவர்கள் பிறரை கண்டு வணக்கம், நல்லா இருக்கீங்களா இது போன்று எல்லாம் சொல்ல மாட்டார்கள். வணக்கத்துக்கும் ராதேக்ரிஷ்ணா நல்லா இருக்கேங்களாக்கும் ராதேக்ரிஷ்ணா, போயிட்டு வரேனுக்கும் ராதேக்ரிஷ்ணா. பஜனை பாடுவதில் கெட்டிக்காரர்கள். இவர்களை மிஞ்ச வேண்டும் ரமேஷ்.

                   வீடே விழாகோலம் கொண்டது. சிறுவர்களுக்கு ராதா மற்றும் கிருஷ்ணர் போல வேடமிட்டு இருந்தனர்.ரமேஷ் அவர்களை புகைப்படம் எடுத்து கொண்டிருந்தான். ராதேக்ரிஷ்ணா குழு வந்து ராதேக்ரிஷ்ணாக்களை பரிமாறிகொண்டனர். ரவியும் ரமேஷும் சாப்பட்டை ஒரு பிடி பிடிக்க காலையிலிருந்து தேநீர் கூட அருந்தவில்லை. அறையின் நடுவில் ஒரு ராதேக்ரிஷ்ணா சிலை. அதன் இரு புறங்களிலும் மக்கள் அமர்ந்துகொண்டனர்.
தோடயமங்கலம் பாடி பஜனையை துவக்கினார் ராதேக்ரிஷ்ணா குழுத்தலைவர். ரகுவின் வார்த்தைகளே ரமேஷ் மனதில் இருந்தது. பாகவதர் போல பாடல்களை பாடினான். அரங்கில் இவன் குரல் தனியாக கேட்க தொடங்கியது அந்த அளவு ஈடுபாடு. சிலர் பக்திமிகுதியில் ஆடவும் ஆரம்பத்தினர். எங்கே தன்னை மிஞ்சிடுவார்களோ என அஞ்சி தானும் ஆடலானான். எல்லோரின் பார்வையும் ரமேஷ் மேலேயே இருந்தது. ரமேஷுக்கு அவ்வளோ சந்தோஷம் பாயசத்தோடு வேலையும் ஆகபோகிறதே. ஒரு மூதாட்டி ரமேஷுடன் கைகோர்த்து ஆட ஆரம்பித்தார். மூதாட்டிக்கு இவனே கிருஷ்ணன் என்ற எண்ணம். எல்லார் எண்ணமும் பஜனை  மேல் இருக்க ரகுவுக்கோ கவனம் பாயசம் மேல். அம்புஜம் மாமிக்கு பாயசம் கின்றேன் பேர்வழி என்று இரண்டு மூன்று டம்ளர் பாயாசம் உள்ளே தள்ளினான்.
                   பஜனை முடிந்து உணவு விருந்து ஆரம்பமானது.ராதேக்ருஷ்ணா குழுத்தலைவர் அடுத்த பந்திக்கு காத்துண்டு இருக்கறவா பாட்டு பாடுங்களேன் என்றார். ஒரு சிறுமி பள்ளிகூடத்து ரைம்ஸ் போல ஏதோ பாடினாள். ச ரீ க என ஸ்வரம் போட்டு ஒரு பெண்மணி பாடினார். பாடல் வரிகளை விட ச ரீ தான் அதிகம். பின்னர் ஓர் இனிய குரலில் ஒரு பாடல் ஒலித்தது கிருஷ்ணா நீ பேகனே பாரோ. பாடல் முடியும் வரை அப்படியொரு அமைதி.பாடியவர் 20 22 வயது பெண். வெள்ளையும் இல்லை கருப்பும் இல்லை மா நிறமும் இல்லை, வெண்கலம் போல் ஒரு நிறம். MS மாதிரி பாடுற சுருதி சுத்தமா பாடுற என்று பாராட்டுக்கள் வேறு. ரமேஷ் பாதி பாடலிலேயே கனவுலகத்திற்கு சென்று விட்டான். கிருஷ்ணா நீ பேகனே காதல் டூயட் ஆனது.பஜனையின் போது ரமேஷ் இவளை பார்க்கவில்லை. இவனுக்கு பின்னால் இரண்டு மூன்று வரிசை தள்ளி அமர்ந்து இருந்தாள். அவளை நூற்றுகணக்கில் புகைப்படம் எடுத்தான்.
                 எல்லோரும் அவளை சூழ்ந்து பாராட்ட தொடங்கினர். ரமேஷ் அவளிடம் பேச அவளிடம் நெருங்கையில் மொபைலில் அழைப்பு வர அவள் கிளம்பிவிட்டாள். அவசரம் போலும். ரமேஷும் அங்கே அவன் வேலைகளை முடித்து கொண்டான்.

                   பஜனை முடிந்து காரில் செல்கையில் ரகு கூறினான், "எல்லாரும் அவ வாய்ஸ் ஸ்வீட்டா இருக்கு ஸ்வீட்டா இருக்கு சோ ச்ச்வீட் இப்டி சொல்றாங்களே. அவ குரல் என்ன பாயசமா இனிப்பா இருக்க, மக்குமந்தைங்க. எப்படி குரல் ஸ்வீட்டா இருக்கும். நீயே சொல்லு டா."
                "அத விடு லவ் மூட்ல இருக்கறச்ச மக்களுக்கு எந்த பாட்டு தோணும்."
                "அது லவ் பண்ற பொண்ண பொருத்தது. பொண்ணு நல்லா ஓபன் டைப்னா முக்காலா முக்காபுலா மாதிரி வரும். கில்பான்சிகோவா இருந்தா கட்டிபுடி கட்டிபுடி டா மாறி வரும். நல்ல டீப் லவ்னா இளையராஜா, ரகுமான் பாட்டு வரும். எனக்கு கல்பனாவ காலேஜ்ல பாக்கும் போது பச்சை நிறமே தோனிச்சு. அவளுக்கும் அதே பாட்டு தான் ஆனா அவமனசுல இருந்தது தடியா இருப்பானே அர்ஜுன்னு பேர் வெச்சிட்டு பீமன் மாதிரி அவன்."
               "கரெக்ட் டா. ஆனா எனக்கு கிருஷ்ணா நீ பேகனே வருதே. என்ன பொண்ணு டா அது. என்ன வாய்ஸ். பாயசமே தோத்துடுச்சு டா."
              "அந்த பாட்டி ஓட ஆடினே பரவ இல்லே.அதுக்காக லவ்வா? என்ன இது பாலசந்தர் படம் மாதிரி"
              "முட்டாள் கிண்டலா. கடைசியா பாடினாலே அவ டா. பாட்ட கூட கேக்காத பாயசத்துலையே இரு. என்ன பாட்டு கிருஷ்ணா நீ பேகனே(பாடுகிறான்)."
             "நிப்பாட்டு டா MP3 பிளேயர."
             "தப்பு பண்ணிட்டேன் டா பாட்டு பாடரப்ப போட்டோ எடுத்தேன் வீடியோ எடுத்துருக்கணும்."
             "அத பண்ணிருக்கலாம். நீ பாடி நான் கேக்கற அவஸ்த இருக்காது."
           

                          இரண்டு நாட்கள் கடந்தது. ரகு ஸ்ரீனிவாசனிடம் இருந்து வீடியோ சீடி பெற்று வந்தான். ரமேஷிடம் கொடுத்தான்.பாட்டு வந்தது ஆனால் ஒலி மற்றுமே ஒளி சாப்பாடடு பந்தியை கொண்டு இருந்தது. பாட்டை மட்டும் பதிவு செய்து ஐபோனில் நாள் முழுதும் கேட்டான். அவளை பார்க்க வேண்டும் என துடித்தான். ரகுவிடம் இதை சொல்ல ரகு " என்ன மிஸ்டர் கிருஷ்ணன் ராதாவ பாக்கணுமோ? இண்டிபெண்டென்ஸ் டே மேஜர் சார் ஆபீஸ்ல. கண்டிப்பா எல்லாரும் வருவாங்க. அவள நேஷனல் அந்தெம் பாட சொல்ல போறாங்க. நீ ஜன கன மன பாடிட்டு திரிய போற. அப்படியாவது பாட்டு மாறட்டும். எவ்ளோ நாள் தான் பெக்குனே மக்குனேனு பாட்ட கேக்கறது." என கிண்டல் செய்தான்.
                         
                         ஐநூறுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் கொடி ஏற்றத்துக்கு கூடி இருந்தனர். அம்புஜம் மாமி, ராஜாஜி வீட்டு சமையல்காரரின் மகள். அவரையே கோடி ஏற்ற வைத்தார் மேஜர். கூட்டத்தில் இன்னொருவன் நூடுல்ஸ் போல முடியுடன் கல்லூரி மாணவன் போல இருந்தான். அவனும் எதையோ தேடி கொண்டிருந்தான். ரமேஷுக்கு போட்டியாளரோ என்று பயம்.  ரமேஷ் சென்று அவனிடம் கேட்டான், "என்ன தேடுறேங்க பாஸ்?"
"அண்ணா அன்னிக்கி பஜனைக்கு வந்தேங்க இல்ல. கிருஷ்ணா நீ பேகனேனு ஒரு அக்கா பாடினாங்களே.அவங்களத்தான் தேடுறேன்."
"அக்காவா அப்பாடா"
"என்ன ணா"
"இல்லப்பா நானும் அவளத்தான் தேடுறேன்.எதுக்கு தேடுற?"
"நல்லா பாடுனீங்கனு சொல்லணும். நீங்க எதுக்கு?" 
"நானும் அதுக்கு தான். அப்பிடியே கல்யாணம் பண்ணிக்கிரியானு கேக்கணும் அதான். கொஞ்சம் பாத்தா சொல்லேன்."
"சரி ணா"
"அவ பெயர் தெரியுமா?"
"நோ."
"சரி பாத்தா சொல்லு"
ரகு ஓடி வந்து சொன்னான்," மச்சான் மிசோரி யூனிவர்சிட்டில ஒரு சிலருக்கு எக்ஸாம். அவ இங்க இல்ல. சோ கண்டிப்பா அவ அங்க தான் எக்ஸாம் எழுதிட்டு இருப்பா."
"எதுக்கு சண்டே அதுவுமா எக்ஸாம் வெக்கரானுங்க அவசரம் புரியாதவனுங்க."
"அண்ணா நானும் அதே யுனிவர்சிட்டி தான். அங்க படிக்கல அவங்க. அவங்கள தினமும் சிவன் கோவில்ல பாத்ததா என் கேர்ள் பிரெண்ட் சொன்னா. நானும் பாக்கறேன் அவங்க அந்த பஜனைக்கு அப்பறம் அங்க வரல ணா. நீங்க வேணும்னா அங்க ட்ரை பண்ணுங்களேன்" நூடுல்ஸ் தலையன்  ரமேஷிடம் சொன்னான்.

                          சிவன் கோவிலுக்கு பிரசாதம் தரும் நாட்களுக்கு மட்டுமே சென்ற ரமேஷ் அவளுக்காக தினமும் சென்றான். இரு வாரங்கள் கடந்தும் அவள் அங்கு வரவில்லை. கோவில் பூசாரியிடம் கேட்டுவிடலாம் என போட்டோவை காட்டி கேட்டான் ரமேஷ். பாத்துருக்கேனே என்றார் பூசாரி. தன் மொபைல் நம்பரை கொடுத்து அவள் வந்தா போன் செய்ய சொன்னான். அடுத்தகட்டமாக ஸ்ரீனிவாசன் வீட்டுக்கு சென்று ஸ்ரீனிவாசன்க்கு அவளை தெரியுமா என்று கேட்டான். "சிவன் கோவில் பூஜாரி தான் கூட்டிண்டு வந்தார். என்ன பேஷா பாடித்து. நவராத்திரிக்கு நம்ப ஆத்துல வெச்சி கச்சேரி பண்ண சான்ஸ் குடுக்கலாம்நனு இருக்கேன். வாட் டூ யூ சே?" என்றார் ஸ்ரீனிவாசன்.
"வெச்சிக்கலாம் சார்.", என்றான் ரமேஷ்.
                         
                           உடனே கோவிலுக்கு கிளம்பினான் ரமேஷ். பூசாரியிடம் கேட்டான், " நீங்க தான் பஜனைக்கே கூட்டிண்டு வந்தேங்களாமே அந்த பொண்ண". "அத சொல்லலாம்னு வரதுக்குள்ள அன்னிக்கி கிளம்பிட்ட. அன்னிக்கி வந்து பாடிண்டு இருந்தா. நல்லகுரல் நல்லா MS மாதிரி பாடினா சரி வரட்டுமேனு நான்தான் அழைச்சிண்டு வந்தேன்."
                   
                            வாரங்கள் மாதம் ஆயியின. இரண்டு மாதங்கள் சென்றது. அன்று ஞாயிற்றுகிழமை. ஏழு மணிக்கெல்லாம் கோவிலுக்கு சென்று விட்டான் ரமேஷ். கர்னாடக சங்கீதம் கேட்டது. அவளாக இருப்பாளோ என்று ஒரு ஏக்கம்? குரல் அவள் குரலை ஒற்று இருந்தது. வேகமாக சன்னதியை அடைந்தான். அதே பெண்.அதே சேலை. உடனே கோவிலுக்கு வெளியில் வந்தான், வெளியில் அவள் போது அவளிடம் சொல்லிடவேண்டும் என்று முடிவு எடுத்தான். அவளும் வந்தாள்.
                         
                           ரமேஷை கடந்து சென்றாள் அவள். "அய்யய்யோ போய்ட்டாளே."                  
"ஏங்க. ஏங்க. ஒரு நிமிஷம்."
"வாட்?"
"ஹாய். என் பேரு ரமேஷ். அன்னிக்கி சூப்பரா பாடினேங்க. செம MS மாதிரி பாடுனீங்கனு வேற பேசிகிட்டாங்க."
"போதும் நிறுத்துங்கோ. மிக்க நன்றி. நிஞ்ச ஞாபகம் இருக்குது. அந்த கிழவியோட என்ன ஆட்டம். பிரபு தேவா தோப்பார் உங்க கிட்ட."
"அது சும்மா வேற நோக்கத்துக்கு. அப்போ இருந்து இங்க உங்கள தேடிட்டு இருக்கேன். நீங்க இங்க வருவேங்கனு சொன்னாங்க. என்ன ஆளையே காணும்."
"அப்படியா?"
"இண்டிபெண்டென்ஸ் டேல வேற தேடினேன். அங்கயும் நீங்க வரல."
"ஓ. நான் ஸ்ரீலங்கன். நான் என்ட ஊருக்கு போயிருந்தன்."
"வெகேஷனா?"
"இல்ல. அங்க பட்டாளத்துல என்ட அப்பாவ LTTEனு தப்பா நெனச்சி கைது பண்ணிட்டாங்க. அதான் போயிருந்தன்"
"இப்ப ரிலீஸ் பண்ணிட்டாங்களா நல்லா இருக்காரா?"
"சுகமாய இருக்கார். என்ன சொந்த ஊர விட்டு வந்த துக்கம். அங்க இருந்தா நிம்மதியா இருக்க இயலாது. ஆனா என்ட அப்பா அதான் நிம்மதின்னு சொல்றார்."
"சரி. நான் வந்த விஷயத்த சொல்றேன். இந்த 2 மாசத்துலே உங்க பாட்டே 2000 தடவயது கேட்டுருப்பேன். அந்த பாட்ட நீங்க தினமும் நேரடியா பாடி கேக்கனும்னு ஆச"
"ரசிகரோ? கிருஷ்ணா நீ(பாடுகிறாள்)"
"இல்ல அதுக்கும் மேல இருக்கணும்னு ஆச படறேன். சினிமால வரமாதிரி உங்களோட டூயட் பாடற மாதிரி கனவு வருது. அதுவும் நீங்க பாடினேங்களே அந்த பாட்டு தான்."
"புரியலையே"
"இந்தியாவையும் ஸ்ரீலங்காவையும் ஒன்னு செக்கலாமானு?"
"ராமர் பாலம் கட்டுரீன்களோ?"
"இல்ல உன்ன பிடிச்சிருக்கு. உன் மேல அப்படி ஒரு ஆச. நீ என்ன கல்யாணம்  பண்ணிப்பியா? உடனே முடிவ சொல்லிடேன். ப்ளீஸ்."
அவள் சட்டென அவள் காரை நோக்கி  கதவை அடைத்தால். கொஞ்ச நேரம் கழித்து. ஜன்னலை திறந்து, "ரமேஷ். இஞ்ச வாருங்க. என்ட தெரியுமா? பெயர் தெரியாம எப்படி பாலம் கட்டுவீங்க.  koneswaran.yazhpaanam@gmail.com இது என்ட அப்பா ஈமெயில் id. அவர் கிட்டயே உங்க வீட்டுலே இருந்து பெண் கேட்டு மெயில் அனுப்ப சொல்லுங்கோ." ரமேஷ் மகிழ்ச்சியில் துள்ளினான். அவள் வண்டியை ஸ்டார்ட் செய்தாள்.
"ஹே பேர் சொல்லலையே?"
"பிரபா. பிரபா கோணேஸ்வரன்" அவள் கார் கிளம்பியது.
பெயர் சொன்னவுடன் அவன் காதில் ஒலித்தது, "கிருஷ்ணா நீ பேகனே பாரோ."
              

                   

No comments:

Post a Comment